மொஹிதா சினி டாக்கீஸ் தயாரிப்பாளர் M.சுப்ரமணியன் தயாரித்த "மாணிக்" திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியது :- நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனால் [...]
சோஷியல் மீடியாவில் எது வந்தாலும், காதுகளை பொத்திக் கொண்டு கம்மென்று இருப்பதுதான் அஜீத் விஜய் இருவரது வழக்கம். முக்கியமாக ட்விட்டரில் மோதிக் கொள்ளும் தங்களது ரசிகர்களை ‘மூடுங்கப்பா கொஞ்ச நேரம்...’ என்று சொல்லவே மாட்டார்கள். யாராவது சிக்கினால் சிக்கியவர்களின் இமேஜை இழுத்துப்போட்டு சவட்டி எடுப்பது இவ்விரு ரசிகர்களின் பொழுதுபோக்கு. சமீபத்தில் அஜீத் ரசிகர்களிடம் சிக்கி, ஆதியோடு அந்தமாக அசிங்கப்பட்டு நிற்கிறார் நடிகை கஸ்தூரி. ‘முதல்ல உங்க ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லுங்க அஜீத்’ என்று கூப்பாடு போட்டு பார்த்தாலும், [...]
‘இந்த முறையாவது எங்க தலைய சிவா காப்பாத்திடணும்’ என்று பிரார்த்தனை கிளப் ஆரம்பித்து இருபத்திநாலு மணி நேரமும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். வீரம், வேதாளம் என்று கொடி நாட்டிய சிவா, அதற்கப்புறம் விவேகத்தில் கொடியை தலை கீழாக நாட்டியதை கண்டு கொந்தளிக்காத ரசிகர்களே இல்லை. அப்படியிருக்க... நாலாவது முறையும் தலைவரு ஏன் இப்படி பண்றாரு என்கிற அதிர்ச்சியும் எழுந்தது அவர்களுக்கு. இந்த நிலையில்தான் ஃபர்ஸ்க் லுக், செகன்ட் லுக் என்று படுத்தி எடுத்தார் [...]
தானே புயல், வர்தா புயல், கஜா புயல் மூன்றும் ஒரே நாளில் அடித்தால் கூட இவ்வளவு சலசலப்பும் பரபரப்பும் இருந்திருக்காது... ‘பேட்ட’ ட்ரெய்லரும் ‘விஸ்வாசம்’ ட்ரெய்லரும் அடுத்தடுத்த தினங்களில் வெளியிடப்பட்டதால் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது ஊர் உலகம்! பிரச்சனை வெறும் ட்ரெய்லர்கள் அல்ல. அதில் இடம் பெற்றிருக்கும் வசனங்கள். பேட்ட ட்ரெய்லர்தான் முதலில் வெளியானது. ‘ஏய் எவனுக்காவது பெண்டாட்டி, குழந்த குட்டின்னு சென்ட்டிமென்ட் இருந்தா அப்படியே ஓடிப்போயிடு. கொல காண்டுல இருக்கேன். கொல்லாம விட மாட்டேன்’ என்று அதில் [...]
https://www.youtube.com/watch?v=TiDyv53adt0&feature=youtu.be
சில வருடங்கள் கழித்து அதே பழைய ரஜினி என்று உருமி மேள மனசுடன் உற்சாகமாகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். ‘கொல காண்டுல இருக்கேன். அப்படியே ஓடிப் போயிடு’ என்கிற அந்த ஒரு டயலாக்குக்கே அடித்தொண்டை வரள விசிலடிக்கும் ரசிகன், படத்தில் இதுபோல ஐம்பது டயலாக்குகள் இருந்தால் என்னாவான்? யெஸ்... அதுதான் நடக்கப் போகிறது. இஸ்லாமியரான சசிகுமார் குடும்பத்தின் வளர்ப்பு பிள்ளையான ரஜினி ஒரு இந்து. சசி குடும்பத்தை தன் குடும்பமாகவே கருதுகிற ரஜினிக்கு ஒரு திடீர் அதிர்ச்சி. இந்து [...]
ஐயப்ப பக்தர்களுக்கு பதினெட்டாம் படி அனுபவம் போல, இந்த பத்தாம் படி அனுபவத்தை பரவசத்தோடும் பக்தியோடும் எதிர்கொள்ளப் போகிறார் வசீகரன். இந்த பெயர் புலம் பெயர்ந்த சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கோடம்பாக்கத்தின் குட்டி குட்டி சேனாதிபதிகளுக்கும் கூட நெருக்கமான பெயர். கடந்த ஒன்பது வருடங்களாக நார்வே தமிழ் திரைப்பட விழாவை சிறப்பாக நடத்தி வரும் வசீகரன், 2019 ம் ஆண்டு தனது பத்தாவது நார்வே தமிழ் திரைப்பட விழாவை சீறும் சிறப்புமாக நடத்தப் போகிறார். வெறும் கண்துடைப்புக்காகவோ, [...]
இந்த பொங்கலுக்கு அஜீத் படத்துடன் மோத வேண்டும் என்று முடிவெடுத்தவரே ரஜினிதானாம். அதுமட்டுமல்ல, வருகிற தீபாவளிக்கு முருகதாஸ் படத்தை இறக்குவதன் மூலம் விஜய் அட்லீ படத்திற்கும் டஃப் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அவரது திடீர் சீற்றத்தின் பின்னணி என்ன? என்று புரியாமல் மண்டையை சொறிந்து கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இன்று வெளியிடப்பட்ட ‘பேட்ட’ பட ட்ரெய்லர், தாறுமாறு லெவலில் இருப்பதால் ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறது. இப்படியொரு ரஜினியை பார்த்து எவ்வளவு நாளாச்சு என்கிற [...]
https://www.youtube.com/watch?v=FCB0ZfQ9Rzs
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்சேவா. […]
ரஜினிகாந்த் என்றால் ‘இரவின் நிறம்’ என்று பொருள்! இருட்டில்லாமல் சினிமாவே இல்லை. தெரிந்தேதான் இப்படியொரு பெயர் வைத்தார் போலிருக்கிறது இயக்குனர் சிகரம் பாலசந்தர். ஒரு பவுர்ணமி நாளில், வண்ணங்களின் வடிவமான ஹோலி தினத்தன்றுதான் இந்த பெயரை சிவாஜிராவுக்கு வைத்தார் பாலசந்தர். சிவாஜிராவ் கண்டக்டராக இருந்தபோது மக்களுக்காக அடித்த விசிலை ரஜினிகாந்த் ஆனபின் அவருக்காக திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதே மக்கள்! இதுதான் கடவுளின் ஸ்கிரீன் ப்ளே! உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக [...]
கை மாத்தா வாங்குன பத்து ரூபாய்கே கழுத்தை சுற்றி துண்டு போடுகிற உலகத்தில், ஒரு கோடியை வாங்கிக் கொண்டு ‘ஏவ்...வ்’ என்கிறாராம் மிஷ்கின். இந்த அஜீரண ஆக்ஷனை கண்டு விழி பிதுங்கிப் போயிருக்கிறார் அறிமுக நடிகர் மைத்ரேயா. இது குறித்து நாம் ஏற்கனவே பதிவிட்டிருப்பதால் கோயிங் நெக்ஸ்ட்! ‘சைக்கோ’ படம் இவருக்காக செய்யப்பட்ட கதை. அதில் வேறொருவர் நடித்து வருவதால் முறைப்படி மிஷ்கினிடம் விளக்கம் கேட்டிருக்கிறது கோர்ட். அது மட்டுமல்ல, சைக்கோ க்ரைம் த்ரில்லர் கதைகளை படமாக்கக் [...]
‘கடைக்குட்டி சிங்கம்’ கன்னாபின்னா ஹிட்! விடுவார்களா...? சிங்கத்தோடு ஒரு சிலுக்குவார்ப்பட்டியை இணைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். இருந்தாலும் ‘வந்த ஜனங்க நோகக்கூடாது. வறண்ட மண்டையா சாகக் கூடாது’ என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு. இந்த மருத்துவரின் பிரிஸ்கிருப்ஷனில் மருந்துக்கு பதிலாக மண்டை வெல்லத்தை எழுதியிருக்கிறார். அப்புறமென்ன? சிரிப்போ சிரிப்பு! பயந்தாங்கொள்ளி போலீஸ் விஷ்ணு விஷால். அக்கியூஸ்ட்டை அடிப்பதை விட, ஆஃப் பாயிலை ருசிப்பதுதான் அவருக்கு பிடிக்கும். அப்படியாப்பட்ட அர்னால்டை போலீஸ் அதிகாரிகளே அஞ்சும் ரவுடியோடு கட்டி உருள [...]
கொட்டாங்குச்சிக்கு பெயின்ட் அடிச்சு, அதை கோணி ஊசியில நிக்க வச்ச மாதிரி ஒரு கெட்டப்! அதை கண்டு ஊரே அஞ்சுதாம். அவரும் ‘செஞ்சுருவேன்... செஞ்சுருவேன்...’ என்று லெஃப்ட்டாங்கையை ஆட்டி ஆட்டி மிரட்டுவாராம். போன ஜென்மத்திலிருந்தே முடி திருத்தும் கடை பக்கம் கூட எட்டிப்பார்க்காத ரவுடிகள் எல்லாம் ஒரு அடியில் சுருண்டு விழுந்து சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ பார்சல் ஆகிக் கொண்டே இருப்பார்களாம். என்னய்யா இது? இந்தப்படத்தின் ஹீரோ என்ன, பெரிய சைசில் செய்த பேட்டரியா? அல்லது நெய்வேலி கரன்ட்டின் [...]
பல்லவ நாட்டு ராஜகுமாரன் பக்கத்து நாட்டுக்கு படையெடுக்கப் போவது போல, சொந்த சங்கத்திற்கே இராணுவ கவசத்தோடு வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது சூழ்நிலை. வஞ்சகம்... வன்மம்... பூட்டு... என்று ஃபுல் வெறுப்பில் போய் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர் சங்கத்தின் தன்மான வெப்பநிலை. விஷாலுக்கு எதிர் கோஷ்டி, தயாரிப்பாளர் சங்கத்தின் இரண்டு ஆபிஸ்களிலும் பூட்டு போட்டுவிட்டு போய்விட, அதை உடைக்கக் கிளம்பிய விஷாலுக்கு ஆறு மணிநேர ரிமாண்ட். ஒரு கல்யாண மண்டபத்தில் தன் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு அன்று இரவே திரும்பிய [...]
விஷால் மீது லட்சத்தியொரு குறைகள் இருப்பதாக உதட்டை பிதுக்குகிறார்கள் சங்கத்தில். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பை வேலை செய்ய விடாமல் அலுவலகத்துக்கு பூட்டு போட்றீங்களே, அது நியாயமா? என்று நடுநிலையாளர்கள் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்க வந்தால் நல்லது நடக்கும் என்று கடந்த பல வருஷங்களாவே பூச்சாண்டி காட்டி வரும் தலைவர்கள் இப்போதும் கிளம்பியிருப்பதால், சங்கம் நாசமா போவட்டும் என்று வீட்டிலேயே உட்கார்ந்து சாபம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதே நடுநிலை தயாரிப்பாளர்கள். நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் இரண்டு அலுவலகங்களுக்கு [...]
‘சுண்டைக்காயை நசுக்குற மாதிரி சுலபம்னு நினைச்சியா நடிப்பை? அது ஒரு தவம்யா...’ என்று சொல்வதற்காகவே ஒரு படம். ‘நடிகன்டா...’ என்று தலைமேல் வைத்துக் கொண்டாடப்படும் இந்தகால சிவாஜியை இழுத்து வந்து படத்தில் கோர்த்து விட்டிருக்கிறார்கள். வேறு யார்? நம்ம விஜய் சேதுபதிதான். விளம்பரத்திற்கு பயன்பட்ட அளவுக்கு திரைக்கு பயன்பட்டிருக்கிறாரா? கெட்ட சொப்பனமாக முடிந்து போகிறது முதல் அரை மணி நேரம்! சீதக்காதியின் மிச்ச நிமிஷங்கள்...? வயிறு வலிக்க சிரிக்க நினைக்கும் அத்தனை பேருக்குமான ராஜ விருந்து! ஐயா [...]
‘நகச்சுத்தி’க் காரனின் மோதிர விரலுக்குள் நறுக்கென ஒரு எலுமிச்சம் பழத்தை சொருகியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இந்த கனா எழுப்புகிற வினா ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் யாரோ... அவர்களுக்குத் தெரியும், இது வெறும் படமல்ல.... அதையும் தாண்டிய கத்திக் குத்து என்று! கிரிக்கெட் வெறியரான சத்யராஜின் மகள்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தியா தோற்றுவிட்டதே என்று கண்ணீர் விடும் அப்பாவுக்காக அதே இந்தியன் டீமில் விளையாடி ‘கப்’ வென்று அப்பா முகத்தில் சிரிப்பை காண வேண்டும் [...]
அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா போல ஒரு ஆளுமையை இனி ஜென்மத்திலும் பார்க்க முடியாது. அர்ஜுனன்களை மட்டுமல்ல, பீமன்களையும் காலில் விழ வைத்து கதற விட்ட ஒரே தலைவி அவர் மட்டும்தான். அவர் இருந்த தமிழகத்தையும் அவர் இல்லாத தமிழகத்தையும் குறைந்த பட்சம் ஆயிரம் வித்யாசங்களோடு அறிந்து தெளிகிறார்கள் மக்கள். நீட், மேகதாது, ஸ்டெர்லைட், மீத்தேன் என்று எந்த அழிவையும் உள்ளே அனுமதிக்காத காவல் தெய்வமாகவே இருந்தார் அவர் என்பதை இப்போதுதான் புரிந்து கவலைப்படுகிறது ஜனம். அவர் மறைந்தபின் [...]
‘நடிச்சா அவரு நடிக்கணும். இல்லேன்னா அந்த கதையை அப்படியே தூக்கிப் போட்டுட்டு வேற கதையை தேடணும்’ இப்படியெல்லாம் ஒரே ஹீரோவை மனதில் வைத்துக் கொண்டு லட்சிய இயக்குனர்களாக திரியும் பலருக்கு கதையும் அமையாம படமும் கிடைக்காம போறது சகஜம்! ஆனால் அவருக்கு(?) ஆசைப்பட்ட கதை இவருக்கு(?) முடிந்ததில் படு குஷியாகி இருக்கிறார் ஒரு இயக்குனர். அவர்தான் பாலாஜி தரணிதரன். இவரது இயக்கத்தில் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் சீதக்காதி படம், முதலில் கமலுக்காக உருவாக்கப்பட்ட கதை. [...]