சிமென்டு வச்சு பூசுனாலும் சிலுத்துகிட்டு முளைக்கும் சிவகார்த்திகேயன்!
ஆனந்த விகடனுக்கு ஒரு சிரிப்பு… அடுத்த லெவல் சினிமா பத்திரிகைகளுக்கு ஒரு சிரிப்பு என்று மாறுபட்ட(?) கதாபாத்திரத்தில் ஜொலித்தாலும், சிவகார்த்திகேயன் ஒரு ஜீனிக்ஸ் பறவைதான்! (பீனிக்ஸ் தெரியும். அதென்னயா ஜீனிக்ஸ்?)
‘சீமராஜா’, சிவகார்த்திகேயன் படங்களில் ஒரு ஸ்டெப் முன்னேற்றம் என்றாலும், கலெக்ஷன் விஷயத்தில் குய்யோ முய்யோ என்கிறார்கள். அவரது முந்தைய படங்களை விட சற்றே சறுக்கல்தான் என்கிறது விநியோக வட்டாரங்கள். அதுவும் ரிலீசுக்கு முந்தைய நாள் அவரது பாஸ்ட் பஞ்சாயத்துகள் வரிசை கட்டி நின்றதில் படு அப்செட் சிவா. சுற்றி வந்த முன்னணி தயாரிப்பாளர்கள், உதவி செய்வது போல பாவ்லா காட்டினாலும் கண்கொத்தி பாம்பாக கவர நினைத்தது சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டைதானாம்.
ஒரு இரண்டெழுத்து தயாரிப்பாளர், “தம்பி… இந்த கஷ்ட நேரத்தில் 20 கோடி ரூபாய் லம்ப்பா தர்றேன். எனக்கு கால்ஷீட் கொடு” என்று கேட்க, “அவசரத்தில் எடுக்கிற முடிவு சரியா இருக்காதுன்ணே. நிதானமா பேசுவோம். இப்ப கடன் வாங்க ஒரு பைனான்சியரை காட்டுங்க போதும்” என்றாராம் சிவா. கட்…
எப்படியோ கடன் காரர்களை சமாளித்து கோடம்பாக்கத்தில் நின்று காட்டணும் அல்லவா? அடுத்தடுத்து இரண்டு படங்களின் இயக்குனர்களை அறிவித்த சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது பட இயக்குனர் பற்றிய விபரங்களையும் இன்று நாட்டுக்கு தெரியப்படுத்திவிட்டார்.
அவர்தான் ‘இரும்புத்திரை’ என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். என்ன மாதிரி கதையோடு இருவரும் வரப்போகிறார்களோ தெரியாது. சிவகார்த்திகேயனின் ஸ்லிப் ஆகாத தன்னம்பிக்கையை போற்றும் விதமான காம்பினேஷன் இது.
இந்த படத்திலேயாவது ஸ்கிரீனிலும் சிவகார்த்திகேயனாக தோன்றாமல், கதை யாரை தேடுகிறதோ, அந்த நடிகனாக தன்னை மாற்றிக் கொள்ளுங்கள் சிவா.
ரூட் கிளியரா இருக்கும்!

