beware of நயன்தாரா! பிதற்றும் குண்டர்கள்!

நயன்தாரா பேரழகியா? அல்லது பேரழிவா? என்ற டவுட் அண்மைக்காலமாக எழுந்திருக்கிறது. அதற்கு காரணம், அகத்தின் அழகை, முகத்தில் காட்டி தன் படக்குழுவையே தடதடக்க விடுகிறாராம் அவர். ‘உலகம் வேணா பெருசா இருக்கலாம். ஆனால் வாழ்க்கை ரொம்ப சிறுசும்மா சிறுசு…’ என்று புலம்பும் தொழிலாளர்களும், யூனிட்டும் அதை அவரது காதுக்கு கேட்கும்படி சொல்வதற்குதான் கண்டபடி யோசிக்கிறது. விளைவு? பால் வடிந்து கொண்டிருந்த நயன்தாரா முகத்தில், பிளீச்சிங் பவுடரின் நெடி தொடர்கிறது!
இப்போதெல்லாம் நயன்தாராவின் ஷுட்டிங் நடக்கிறது என்றால், அங்கு பின் டிராப் சைலன்ட் மெயின்டெய்ன் செய்யப்படுகிறதாம். யாராவது லைட்டுகளை நகர்த்த ஸ்டேண்டுகளை இழுத்தால் கூட, ‘அங்க என்ன சத்தம்’ என்பது போல அவர் லுக் விடுகிறார். அவ்வளவுதான்… அவர் விழியால் இட்ட கட்டளையை தலையால் சுமந்து கொண்டு ஓடிவருகிறார்களாம் குண்டர்கள். சம்பந்தப்பட்ட ஸ்பாட்டுக்கு வந்து, “யோவ்…. சத்தமில்லாம வேலை பார்க்க மாட்டீங்களா? மேடம் டென்ஷன் ஆவுறாங்கள்ல?” என்று அதட்டுகிறார்களாம்.
அந்த யூனிட்டுக்கு சம்பந்தமில்லாத புது நபர்கள், அங்கு எங்காவது தென்பட்டால் கூட தன் அடியாட்களை ஏவி அவர்கள் பற்றிய விபரங்களை கேட்க சொல்கிறாராம் நயன். கேரவேனிலிருந்து கேமிரா இருக்கும் இடத்திற்கு வருவதற்கு கூட இந்த குண்டர்களின் புடை சூழல் அவருக்கு தேவைப்படுகிறதாம். இப்படி அளவுக்கதிகமாக பந்தா பண்ணும் நயன், எந்நேரமும் முகத்தை கடு கடுவென வைத்திருப்பதுதான் ஏனென்றே தெரியாமல் விழிக்கிறார்கள் யூனிட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள்.
கடுகடுவென இருந்து இருந்து அண்மைக்காலத்தில் அவரது முகமே அப்படி மாறிப் போனதாகவும் கவலைப்படுகிறார்கள். ஒருகாலத்தில் எல்லாருக்கும் தோழியாக, அன்பின் திருவுருவமாக இருந்த நயன், இப்போது இப்படி ஆனதன் காரணம், சுற்றுபுற சூழ்நிலை அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
அடேய்… ஆண்களே. ஒரு திருவிழா தீபத்தை, இப்படி தீவட்டியாக்கிட்டீங்களேடா….
https://youtu.be/V-HNaHIUBrg
