அம்மாவின் மரணம்! அவ்வளவு சோகத்திலும் நடித்து முடித்துவிட்டு கிளம்பிய ஆரி!

ஒவ்வொரு ஹீரோவும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தை ஒரு இக்கட்டான நேரத்தில் கூட நடத்திக் காட்டியிருக்கிறார் பிரபல ஹீரோ ஆரி. ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை, மாயா என்று பரபரப்பாக முன்னேறிக் கொண்டிருக்கும் இளம் ஹீரோ ஆரி. தற்போது ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தின் ஷுட்டிங் திண்டிவனம் அருகே நடந்து கொண்டிருந்தது. அங்கிருக்கும் கண்னையா தியேட்டரை நாகேஷ் திரையரங்கமாக மாற்றி ஷுட்டிங் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில்தான் அந்த பேரிடி வந்தது ஆரியின் காதுக்கு. அவரது தாய் முத்துலட்சுமி இறந்துவிட்டார். அவர் மட்டுமல்ல. அந்த படப்பிடிப்பு தளமே சோகத்தில் மூழ்கி விட்டது. மதியம் இரண்டு மணி கால்ஷீட் போட்டு மறுநாள் காலை வரை ஷுட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.

தயாரிப்பாளரும் இயக்குனரும், “நீங்க உடனே கிளம்புங்க” என்று கூறிவிட்டார்கள். ஆனால் செட் செலவு, ஷுட்டிங் செலவு, அதுமட்டுமல்ல. அன்றோடு படப்பிடிப்பும் முடிகிறது. ஆரி கிளம்பிப் போனால் தயாரிப்பாளருக்கு ஏராளமான நஷ்டம் வரும். ஒரு நிமிஷம் யோசித்த ஆரி, “நான் படங்களில் நடிக்கணும்ங்கறதுதான் அம்மாவின் கனவு. ஷுட்டிங்கை நான் முடிச்சுட்டே போறேன்” என்று கூறிவிட்டார் உறுதியாக.

பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு அவர் நடிக்க, அதைவிட சோகத்தோடு அந்த ஷுட்டிங்கை நடத்தி முடித்தார் டைரக்டர்.

இந்த கோடம்பாக்கத்தில் இப்படியும் நடிகர்கள் இருக்கிறார்கள். முரண்டு பண்ணும் ஹீரோக்களே… கொஞ்சம் ஆரியை நினைங்க. செய்யும் தொழிலே தெய்வம் என்பது புரியும்.

https://www.youtube.com/watch?v=r04XZ0Q4HAo&feature=youtu.be

1 Comment
  1. Ghazali says

    புதுசா நடிக்க வந்து மூஞ்சி யாருக்கும் பரிச்சயம் ஆகாத நிலையிலும் சிலர் படுத்தும் பாடு… ஆரியிடம் பாடம் படிக்க வேண்டும்.
    என் படம் சாய்ந்தாடு, நாயகனால் கஷ்டப்பட்ட நான் ஆரியை நினைத்துப் பெருமைப்படுகிறேன், மனசாரப் பாராட்டுகிறேன்.
    – கஸாலி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தமிழ் பட தயாரிப்புக்கு குட்பை! பிரபுதேவா முடிவின் பின்னணி?

Close