அஜீத் படம்! இவ்வளவு களேபரத்திலும் கைகொடுத்த சசிகலா?

அடி கொடுத்தது ஒருவர்… ஆயின்ட்மென்ட் கேட்பது இன்னொருவரிடமா? என்கிற கேள்விக்கெல்லாம் எப்போதும் விடை கிடைத்ததே இல்லை. அந்தப்படம் ஓடலே. அதனால் இந்தப்படத்தை விட மாட்டோம் என்கிற லாஜிக் இல்லாத ரவுடித்தனத்தை பல காலமாகவே மெயின்டெயின் பண்ணி வருகிறது விநியோகஸ்தர் வட்டாரம். அப்படிதான் தனுஷின் தொடரி படத்தோல்விக்கு, அஜீத்தின் ஏகே47 படத்தில் அட்ஜஸ்ட் பண்ண சொல்லி மிரட்டல் விடுத்தார்கள். ஆக மொத்தம் ஏ.கே.57 வருகிற நேரத்தில், தொடரியை காரணம் காட்டி சிக்கலுக்குள்ளாக்குவார்கள் என்ற திகுதிகுப்பு மறையவில்லை.
இதற்கு இப்போது முற்றிலும் விடை கிடைத்துவிட்டது. பல்கேரியா படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று சென்னை வந்து சேரும் அஜீத்திற்கு இந்த தகவல் மகிழ்ச்சியை அளிக்கும்.
அஜீத்தின் ஏ.கே 57 படத்தை சசிகலாவின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்ட ஜாஸ் சினிமா வாங்கி விட்டதாம். எப்பவுமே ஆளுங்கட்சி ஒரு விஷயத்தில் தலையிட்டிருக்கிறது என்றால், அடக்கி வாசிப்பார்கள் விநியோகஸ்தர்கள். அந்த வகையில், ஏ.கே.57 க்கு க்ளீன் பச்சைக் கொடி காட்டப்பட்டு விடும்.
படம் வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றாலும், இப்பவே ரூட்டை க்ளியர் செய்து வைத்திருப்பதும் நல்லதுக்குதானே?
