சூர்யா அதிருப்தி? நசுங்கும் விக்னேஷ் சிவன்!

சூர்யாவை வைத்து படம் இயக்குகிற யாருக்கும் பட்டுத்துணியை, தொட்டுத் துடைத்துக் கொள்கிற அளவுக்கு இன்பம் வாய்க்காது. வாய்க்குள் குச்சியை விட்டு தொப்புள் வழியாக பிடுங்கி விடுவார்கள் அவரும், அவரது சகாக்களும். அது புரியாமல் சிக்கிக் கொண்ட விக்னேஷ் சிவனுக்கு இப்போது நாளொரு குடைச்சலும் பொழுதொரு பிடுங்கலும்!

ஸ்பெஷல் 26 என்ற படத்தை தழுவிதான் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறாராம் விக்னேஷ்சிவன். தற்போது எடுத்தவரைக்கும் படத்தை போட்டுப் பார்த்த சூர்யா, திருப்தியா இல்ல. ரீ ஷுட்டிங் போகலாம் என்று கூறிவிட்டாராம். அதுவும் ஒரு நாளல்ல. இரு நாளல்ல… சுமார் ஒரு மாத கால்ஷீட்டுக்கு.

பதறிப்போயிருக்கிறார் விக்னேஷ்சிவன். ஏன்? இந்தப்படத்தை முடித்துவிட்டு அதற்கப்புறம் சிவகார்த்திகேயன் சிபாரிசில் அமையப்போகும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் இவர். இங்கு தும்பை விட்டால்தானே அங்கு வாலை பாலீஷ் போட முடியும்? அதற்காகதான் இந்த அவசரம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆஃப்டர் விவேகம்! அஜீத் சிவா சந்திப்பு! நடந்தது என்ன?

Close