தமன்னா மீது செருப்பு வீச்சு! எதற்காக இப்படி செய்தானாம்?
அவிச்ச முட்டையில மஞ்சப் பொடி தூவுனா மாதிரி இருக்கிற தமன்னாவை, தவிக்க விட்ட சம்பவம்தான் இது. காலக் கொடுமை… பூ வா இருந்தா கூட அதை தேளா ட்ரீட் பண்ற அளவுக்கு மனநிலை மாறிடுச்சா ரசிகனுக்கு?
நடந்த சம்பவம் இதுதான். கடந்த சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் ஒரு நகைக் கடையை திறக்க வந்திருந்தார் தமன்னா. பெரும் கூட்டம். பெருத்த வரவேற்பு. சந்தோஷத்தில் முகமெல்லாம் பல்லாக வெளியே வந்த தமன்னாவை நோக்கி, தில்லாக ஒருவன் செருப்பை வீசிவிட்டான். நல்லவேளை… செருப்பு தமன்னாவை தீண்டாமல் அருகிலிருந்தவரின் மீது பட்டு அங்கேயே தற்கொலை செய்து கொண்டது.
பாய்ந்து ஓடி செருப்பு வீசிய ஆசாமியை கைது செய்துவிட்டது போலீஸ். விசாரித்தால், அந்தாள் சொன்ன விஷயத்தை தமன்னாவும் சற்று கவனித்தால் தேவலாம் ரகம்தான். என்னவாம்?
‘வரவர இந்த பொண்ணு என்னங்க படம் பண்ணுது? எரிச்சல் எரிச்சலா வருது. அதான் செருப்பை வீசி என்னோட எதிர்ப்பை பதிவு பண்ணினேன்’ என்றாராம் அந்த நபர்.
சமீபத்துல என்ன படம் வந்திச்சு தமன்னாவுக்கு? ஓ… அதுவா… ஆங் அதேதான்!