ரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி?

சுவாரஸ்யமான பிளாஷ்பேக்குள்

கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெய் சங்கரை தனது ‘முரட்டுக்காளை’ படத்தில் வில்லனாக்கினார் ரஜினி. அன்றோடு முடிந்தது ஜெய் சங்கரின் ஸ்பீட்! அதற்கப்புறம் அவரால் ஹீரோவாக நடிக்க முடியவில்லை. அதற்கு முன்னால், விஜயகாந்த் விறுவிறுப்பான ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், ரஜினியிடமிருந்து ஒரு அழைப்பு.

‘பெருத்த சம்பளம். ஆனால் ரஜினிக்கு வில்லனா நடிக்கணும்’ இதுதான் நிபந்தனை. பணத்திற்கு ஆசைப்பட்டு அட்வான்சை வாங்கிய விஜயகாந்த், அதற்கப்புறம் சுய புத்தி எச்சரித்த காரணத்தால் அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டு எடுத்தார் ஓட்டம். அதனால்தான் அவரே விரும்பி ஓய்வெடுக்கிற வரைக்கும் அவரால் ஹீரோவாகவே நடிக்க முடிந்தது. நடுவில் சத்யராஜையும் இதே போல வளைக்க ஆரம்பித்தார்கள். மனுஷனுக்கு துடுக்கு ஜாஸ்தியாச்சே? ‘என் படத்தில் அவர் வில்லனா நடிப்பாரா?’ என்று கேள்வி கேட்டு கடுப்பேற்றினார்.

இப்படி முன்னணியிலிருந்த முக்கிய நடிகர்களையெல்லாம் வளைத்து வளைத்து தனக்கு வில்லனாக்கிக் கொள்வதில், ரஜினிக்கு நிகர் அவரே.

அந்த வரிசையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ரஜினிக்கு வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி. தமிழ்சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு, ஹீரோவாகவே ஓடிக் கொண்டிருக்கும் சேதுபதிக்கு இது சோதனை காலமா? அல்லது சூப்பர் காலமா?

பணத்தை காட்டி விஜய் சேதுபதியை மடக்க முடியாது. ஏனென்றால், அவர் அதற்கெல்லாம் மசிகிற ஆள் இல்லை. அப்படியென்றால் இவர் ரஜினியின் தீவிர ரசிகரா? அதெல்லாம் இல்லை. ஒருமுறை கூட தனது படத்தின் ஆடியோவை ரஜினி சார் கையால வெளியிட வைங்க என்று அவர் தனது தயாரிப்பாளர்களை நெருக்கியதே இல்லை. விரும்பியிருந்தால் நொடியில் நடந்து விடுகிற ஆசைதான் அது. அப்படியென்றால் யாருக்காக? எதற்காக? இந்தப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டார்?

சாட்சாத் கார்த்திக் சுப்புராஜுக்காகதான். தன்னை பீட்ஸா படத்தில் ஹீரோவாக வெற்றிபெற வைத்தவர். தனது வெற்றியில் பெரும் பங்கெடுத்து வருகிற நபர். உற்ற நண்பன். நல்ல அட்வைசர் என்கிற அடிஷனல் குவாலிபிகேஷன்தான்.

அப்படிப்பட்ட ஒருவர் தான் மட்டும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று இந்தப்படத்தை எடுக்க மாட்டார் என்று நம்பியிருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது நம்பிக்கையை எப்படியெல்லாம் மீட்டுத்தரப் போகிறாரோ கார்த்திக் சுப்புராஜ்?

அதை தெரிந்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது.

3 Comments
  1. ramanayagan says

    Agreed. After the movie with Rajini, Vijay Sthupathi will not be seen as same by audience. So, it will be downfall for Sethu. If Sethu is smart, walk out of Rajini movie.

  2. Rajasekar says

    ஏவி.எம் நிறுவனம் தான், ஜெய்சங்கரை முரட்டுக்காளை படத்திற்கு ஒப்பந்தம் செய்தது. சும்மா, தலைவர் ரஜினி மீது , உண்மை தெரியாமல் புழுதி வாரி தூற்ற வேண்டாம். அப்புறம், விஷகாந்து விவகாரத்தில், அவன் தான் “என் கேள்விக்கு என்ன பதில்” என்ற படத்தில் தலைவரை கெஞ்சி வாய்ப்பு கேட்டு நடித்து, நடிப்பு வராமல், பாதியிலேயே ஓடிவிட்டான். நீ என்னதான் தலைவர் ரஜினி அவர்களுக்கு எதிராக எழுதி வந்தாலும், தமிழக மக்கள், தலைவர் ரஜினி அவர்கள் மீது வைத்து இருக்கும் அன்பு என்றும் மாறாதது. தமிழக மக்களின் ஆதரவோடு, தலைவர் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆவது நிச்சயம்.

  3. Saravanan says

    A very Biased article. If You dont like Rajini, that is different, but dont put false news and damage your character. Idhukku nee vera polappu pakalam

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கை கட்டி நிற்காதீங்க! கமல் அழைக்கிறார்!

https://youtu.be/DSA74U9ZJyY

Close