அஞ்சு… ஆறு… ஏழு… சூர்யா-வெங்கட்பிரபு? கணக்குகளும் பிணக்குகளும்!

சூர்யாவின் கால்ஷீட்டுக்காக முன்னணி இயக்குனர்கள் கதையோடு காத்திருக்க, ‘பிரியாணி’ என்கிற குஸ்காவை, குஸ்கா என்கிற பழைய சோறை, நாட்டுக்கு பரிமாறிய வெங்கட் பிரபுவின் கதை மீது ஆசை வைத்திருக்கிறார் சூர்யா. இந்த வியத்தகு வேதனையை ஜீரணிக்க முடியாமல் சிலர் தவித்துக் கொண்டிருக்க, இப்போது வெங்கட் பிரபுவையே ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார் சூர்யா.

விரும்பிதானே கதை கேட்டார்? இப்போது எதற்கு வெறுப்பு? வேறொன்றுமில்லை, இந்த படத்தை தனது சொந்த பேனரில் எடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் சூர்யா. சம்பளம் பேச வெங்கட் பிரபுவிடம் உட்கார்ந்தால், அவர் ஏழு விரல்களை காட்டுகிறாராம். அத்தனையும் சி கணக்கு. அவ்வளவு சம்பளமா? அதிர்ந்து போன சூர்யா நாலு விரலை நீட்ட, ‘நீங்க கூப்பிட்டுதான் நான் வந்தேன். இல்லேன்னா எனக்கு மார்கெட்ல நிறைய ஆஃபர் இருக்கு’ என்கிறாராம் வெங்கட் பிரபு. அவர் ஆஃபர் என்று குறிப்பிட்டது அஜீத்தை.

விட்டால் வெங்கட்பிரபு அஜீத் பக்கம் சாயக் கூடும். ஏற்கனவே கவுதம் மேனனை அனுப்பிவிட்டு கெட்ட பெயர். இப்போது வெங்கட் பிரபுவையும் அனுப்பிவிட்டால் பிரச்சனை என்று நினைக்கிறாராம் சூர்யா. இழுத்து பறிச்சு ஆறுல முடிப்பாங்க போல தெரியுது.

மனசு ஆறுற மாதிரி படம் எடுங்க, அது முக்கியம்.

Venkat Prabhu raises his salary for Suriya’s film?

Suriya has confirmed his next film will be with director Venkat Prabhu and Suriya himself would be producing the film. During the salary negotiation for the film, Suriya asked the director Venkat Prabhu for his salary who demanded Rs.7 crores which surprised the actor. When Suriya offered him Rs.4 crores, Venkat Prabhu seems to have told the actor that he has come because of Suriya’s invitation and he has good offers in the market, perhaps meaning Ajith. Suriya who lost director Gautham Menon loses Venkat Prabhu too to Ajith, he may earn the negative reports from the market, and hence decided to renegotiate with Venkat Prabhu and begin the film soon after the completion of his Anjaan.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘நறுக்கிட்டேன்…’ லிங்குசாமி முடிவால் பதற்றம் தணிந்தது

‘இனம்’ படம் தமிழினத்தை கேவலப்படுத்துவதாக உணர்வாளர்கள் கொந்தளிக்க, அதைவிட பெரும் கொந்தளிப்புக்கு ஆளானார் படத்தை தமிழகத்தில் வெளியிட்டிருக்கும் லிங்குசாமி. இந்த விஷயத்தில் அவரை வற்புறுத்திதான் உள்ளே கொண்டு...

Close