திருநங்கைகளிடம் சில்மிஷம்! நகைச்சுவை நடிகருக்கு அடி உதை!

கொட்டாச்சி என்ற நகைச்சுவை நடிகரை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவருக்கு யாரும் இப்போதெல்லாம் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் நடிகர் ஆகிவிட்டார். ஏன் அவருக்கு இப்போது யாரும் வாய்ப்பு தருவதில்லை என்ற கேள்விக்குள் போனால், கொட்டாச்சி என்ற பெயரை ‘கெட்டாச்சி’ என்று வாசிக்கிற அளவுக்கு அலட்டல் புராணம் நீளும். அதனால் நேரடியாக மேட்டருக்கு(?) போய்விடலாம்.

சில தினங்களுக்கு முன் சேலம் வந்த கொட்டாச்சி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். தன்னிடமிருந்த பர்ஸ், அதற்குள் இருந்த கிரடிட் கார்ட்ஸ் இவற்றுடன் தனது இரண்டு பவுன் சங்கிலியையும் பறித்துக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல… தன்னை நன்றாக அடித்து துவைத்துவிட்டார்கள் என்றும் புகாரில் கூறியிருந்தார். அவரால் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஆட்டோ டிரைவர்களை போலீஸ் தேடி வருகிறது.நள்ளிரவில் ஏன் கொட்டாச்சி அந்த ஆட்டோ டிரைவர்களிடம் சிக்க வேண்டும்? அங்குதான் சொல்லப்படாத காரணத்தை சொல்லி சொல்லி மாய்ந்து போகிறது சேலம் பஸ் ஸ்டாண்ட். பொதுவாகவே நள்ளிரவில் அங்கு திருநங்கைகளின் அட்டகாசம் இருக்குமாம். தனியாக வருகிற ஆண்களை சிரித்துப் பேசி சில்மிஷத்துக்கு அழைப்பார்களாம். அப்படி ஆசைப்பட்டு போகிறவனுக்கு அடிமடியில் சொரேர்தான். பையில் இருப்பதையெல்லாம் அடித்து பிடுங்கிவிடுவார்களாம். அதற்கு சில ஆட்டோ டிரைவர்களும் உடந்தை. அப்படிதான் கொட்டாச்சி சிக்கினார் என்கிறார்கள்.

ஆனால் போலீசில் பாதிக் கதையை மட்டும் சொல்லியிருக்கிறார் அவர். பர்ஸ் கிடைத்ததோ இல்லையோ? வண்டி வண்டியாக டோஸ் கிடைத்திருக்கிறது கொட்டாச்சிக்கு. ‘வாயார’ வாழ்த்தி அனுப்பிய போலீஸ், “பர்ஸ் கிடைச்சதும் சொல்லியனுப்புறோம். போயிட்டு வா” என்று அனுப்பி வைத்ததாம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புரட்சியை நோக்கி விஷால்! புதிய அத்தியாயத்திற்கு தயாராகும் தமிழ்சினிமா!

Close