விஜய் டங்க் ஸ்லிப்! விட்டு வெளுக்கும் அஜீத் ரசிகர்கள்!

யார் சொன்னது, விஜய் ரொம்ப ரிசர்வ்டு டைப் என்று? நேற்று தெறி பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதை கேட்டால், உடனடியாக அவர் பற்றிய முந்தைய கணிப்புகளை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள். ரைமிங், மற்றும் டைமிங்காக பேசி பிரமிக்க வைத்துவிட்டார். அந்த ஸ்பீச் தானாக தயாரித்ததா, அல்லது மண்டபத்துல யாராவது?… என்று யோசிக்க வைத்துவிட்டது அந்த பேச்சு. “இந்த படத்துல ரெண்டு ஹீரோயின்ஸ். ஒண்ணு செல்பி புள்ள. இன்னொன்னு குல்பி புள்ள…’ என்று அவர் சொன்னதை சிரிக்காமல் ரசிக்கவே முடியாது.

“நாம் நிறைய தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். ஒரு புலி மான் கூட்டத்தை துரத்திக் கொண்டு ஓடும். அப்போது அந்த புலி எல்லா மான்களையும் துரத்துவதை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட மானை மட்டும் இலக்காக வைத்துக்கொண்டு அதை வேட்டையாடி கொல்லும். அந்த புலிதான் கலைப் புலி. வெற்றி என்ற ஒன்றை மட்டுமே சினிமாவில் இலக்காக கொண்டு, அதை தேடிப் பிடித்து புலியாக வலம் வருகிறார். தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகிறார்,” என்று அவர் பேசியதற்கெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.

அதற்கப்புறம் ஒரு கதை சொன்னார். அதை ஏன் சொல்ல வந்தார் என்பதை விடுங்கள். “ஒரு சிறுவன் தெருவோரத்தில் ரஷ்யத் தலைவர் மாவோ அவர்களின் படத்தை மட்டும் விற்றுக் கொண்டிருந்தான். அந்த வழியாக போன மாவோ இதை பார்த்துவிட்டு, தம்பி… நீ இப்படி ஒருவருடைய படத்தை மட்டும் விற்பது சரியல்ல. மற்ற தலைவர்களின் படங்களையும் விற்க வேண்டும் என்று சொன்னாராம். அதற்கு பதிலளித்த அந்த சிறுவன், அதெல்லாம் முன்னாடியே வித்துப் போச்சு. இது மட்டும்தான் இன்னும் விற்காம இருக்கு என்றானாம்”. இப்படி அவர் சொல்லி முடிக்கும் போது ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்க வேண்டுமே?

எல்லாம் சரி. இந்த மாவோ ரஷ்ய நாட்டு தலைவரல்ல. சைனாவில் வாழ்ந்த தலைவர். இந்த விஷயத்தை குறிப்பிட்டு நேற்றிலிருந்தே சமூக வலைதளங்களில் விஜய்யை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்கள்.

அட விடுங்கப்பா… சின்ன டங்க் ஸ்லிப். அவ்ளோதானே?

2 Comments
  1. Vijay says

    Nenga Moodunga… Ajith fans velukurathuku ithula onnum illa… Ne medaila pesuviya.. unala mudiyum ah.. Ne ethuna article ah thappa soli iruka.. Ajith fans oru potta pasanga… Avan stage yeri pesi ellarukitayum serupadi vanginavanthane

    1. thala says

      I comdi

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிலிம் நியூஸ் ஆனந்தன்- தன்னைப் பற்றி சொன்ன தகவல் தொகுப்பு

✍P.R.O தொழில் உருவாகியது எப்படி? - பிலிம்நியூஸ் ஆனந்தன் ?பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். இதுவே எனது கலை ஆர்வத்திற்கு வித்து....

Close