பாகுபலி2 பற்றி வாயே திறக்காத கமல்! என்னாவொரு பொறாம?

எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் கமல் மாதிரியான உலகம் போற்றும் ஒரு கலைஞன், இந்தியாவையே பிரமிக்க விட்டிருக்கும் இன்னொரு படைப்பாளிக்கு அட்லீஸ்ட் ஒரு ட்விட்டர் வாழ்த்துக் கூடவா சொல்லக்கூடாது? கமல் ரசிகர்களுக்கே இந்த ஆதங்கம் வந்திருப்பதுதான் வேதனை.

சமீப காலமாக கரப்பான் பூச்சி குஞ்சு பொறித்தால் கூட, அதற்காக ட்விட்டரில் வந்து கவலைப்படும் கமல் இந்திய சினிமாவின் பிரமாண்ட படமான பாகுபலி 2 குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமலிருப்பது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சற்று ஆச்சர்யத்தோடு முணுமுணுக்க விட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் ராம்கோபால் வர்மாவே, “இந்தி படவுலகத்தின் கன்னத்தில் அறைந்துவிட்டார் எஸ்.எஸ்.ராஜமவுலி” என்று பாராட்டியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி தனது வீட்டிலிருக்கும் தியேட்டரில் இப்படத்தை பார்த்துவிட்டு, பார்த்த சில நிமிஷங்களுக்குள் ட்விட்டரில் வாழ்த்திவிட்டார்.

இப்படி இந்தியாவிலிருக்கும் முக்கியஸ்தர்களும், பிரபலமானவர்களும், திரையுலகத்தை சேர்ந்தவர்களும் வாழ்த்திக் கொண்டேயிருக்கிறார்கள் பாகுபலியை. ஆனால் கமல் மட்டும் இந்த நிமிஷம் வரைக்கும் மவுனமாகவே இருக்கிறார். அதுதான் ஏனென்று புரியவில்லை. ஒருவேளை, நம்மால் முடியாத விஷயத்தை இன்னொரு நபர் செய்துவிட்டாரே என்கிற பொறாமையாக கூட இருக்கலாம்.

இருந்தாலும் இவரை போன்றவர்களின் புகழ்மதிக்கு மயங்காத மகிழ்மதி, செமத்தியாக கல்லா கட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

https://youtu.be/GidKp9_JGWo

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வருங்கால சீஃப் மினிஸ்டர்! உதயநிதியை அறிவித்த டைரக்டர்!

Close