அந்த கடைசி நேரம்…! விஜய் தந்த கோடிகள்!

நாம கிள்ளிவிட்டது கன்னுக்குட்டியை அல்ல, காளை மாட்டை என்கிற உண்மையை இப்போதாவது தெரிந்து கொண்டிருப்பார்கள் அரசியல்வாதிகள். மெர்சல் படத்தின் பாய்ச்சல் அப்படி! இன்னமும் அடங்காமல் சீறிக் கொண்டிருக்கும் மெர்சல் கலெக்ஷன் அப்படத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமிக்கு நிம்மதி சுவாசத்தை தந்திருக்கும். ஆனால் ரீலீசுக்கு முதல் நாள் அவருக்கு வந்த மூச்சுத்திணறல், பணத்தின் காரணமாக அமைந்ததுதான். படத்தை வெளியிட சுமார் 40 கோடி இருந்தால்தான் முடியும் என்ற நிலையில், தனது சொந்த வீட்டையே 15 கோடிக்கு அடமானம் வைக்க வேண்டிய நிலை.

நாலாபுறமும் பணம் புரட்ட அலைந்தவரின் சிரமத்தை உணர்ந்த விஜய், தானே முன் வந்து ஐந்து கோடி ரூபாய் பணம் கொடுத்தாராம். இது அவர் வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதிதான் என்றாலும், இக்கட்டான நேரத்தில் கொடுக்க மனசு வேண்டுமே?

இவர் மட்டுமல்ல… டைரக்டர் அட்லீ கூட தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை விட்டுத்தந்தாராம். இந்தப்படத்தின் மித மிஞ்சிய கலெக்ஷன் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வைத்தாலும், காலத்தே செய்த உதவிக்கு கைமாறுதான் என்ன?

க்ரேட் விஜய்!

1 Comment
  1. raj says

    Ivanugakitta iruntha karuppu panathathane? Etho ulathu sampathithu kodutha mathiri ovara koovura. Nee vaanguna kaasu appidi.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மெர்சல் பஞ்சாயத்து; பின்வாங்கிய பி.ஜே.பி – உண்மை நிலவரம் என்ன?

https://www.youtube.com/watch?v=hCNtRx0kLPc

Close