கவிஞர் நா.முத்துக்குமார் காலமானார்

இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. தமிழ்சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியன், கவிஞன், எழுத்தாளன் என்று பன்முக திறமை கொண்ட ஒரு ஆளுமை இன்று உயிருடன் இல்லை. ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி, சினிமா பாடல்களுக்கும் இலக்கிய தரம் ஏற்படுத்திக் கொடுத்த அருமையான கவிஞர் நா.முத்துக்குமார்.
கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சையும் மேற் கொண்டிருந்தார். இன்று காலை சுமார் 11 மணி அளவில் அவர் காலமானார்.
அவருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள். அவரது மரணம் திரையுலகத்தை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
