மதன்கார்க்கி ட்விட்டு! மண்டைக்கு மேல குட்டு!

‘பொய்கள் புயல் போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும்!’ கவிஞர் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன்கார்க்கியின் ட்விட் இது. சின்மயி- வைரமுத்து விவகாரத்திற்குப்பின் கவிஞரின் குடும்பத்தை சேர்ந்த யாருமே வாய் திறக்கவில்லையே என்று முணுமுணுத்தவர்களுக்கு இந்த ட்விட் ஒன்றும் அதிர்ச்சியை கொடுத்துவிடவில்லை. நீரடித்து நீர் விலகாதல்லவா?

ஆனால் இந்த ட்விட்டுக்கு கீழே வந்த காமென்ட்டுகள் அத்தனையும் மதன் கார்க்கிக்கு ஆதரவாக இல்லை என்பதுதான் கொடுமை. ‘14 வருஷம் கழிச்சு மெதுவாய் பேசிய உண்மைதான் சின்மயி’ என்று பதிலளித்தார்கள் பலரும். ‘ஒருவர் மட்டுமா சொன்னார்? பதினொரு பேர் சொன்னார்களே, அது உங்களுக்கு தெரியாதா?’ என்றார்கள் சிலர். இன்னும் சிலர் கடுமையான வார்த்தைகளால் வந்து சாடிவிட்டுச் சென்றதும் நடந்தது.

வாயை கொடுத்து பல்லை புண்ணாக்கிக் கொள்வது என்பது இதுதானோ?

1 Comment
  1. Anbu says

    poonai kanna mooduna ulagam irudungura maathiri unga news iruku, aarampathula irunthe intha matter la Chinmayi ku support ah thaan neenga eluthiddu vareenga,.., matha news ku keela varra comments galayum padeenga,,yaruku ena support nu theriyum..paathikka paddavangaluku neethi thevai thaan,,aanal pugaar kodukuravangala avanga pinnaniya pathiyum paarunga…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சர்கார் 2 ந் தேதியே ரிலீசா? பரபரப்பு செய்திக்கு முடிவு!

Close