உலகம் முழுக்க ரஜினி! உள்ளூரில் அஜீத்! கட்டி உருளும் கலெக்ஷன் பஞ்சாயத்து!
‘ரெண்டு படமும்தான் நல்லா போவுதே… அப்பறம் ஏன்ப்பா அடிச்சுக்கிறீங்க?’ என்று நடுவில் நுழையும் நாட்டாமைகள் யாராவது கேள்வி கேட்டு பிரித்துவிட்டால்தான் உண்டு. இல்லையென்றால் இந்த சண்டையை அடுத்த ரிலீஸ் வரைக்கும் இழுத்துக் கொண்டு திரிவார்கள் போலிருக்கிறது.
படம் வெளிவந்த ரெண்டு மணி நேரத்திற்குள், ‘கலெக்ஷன் ரிப்போர்ட் என்னங்க?’ என்று கதறினார்கள் ரசிகர்கள். இந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்ட டிராக்கர்ஸ், தரிசு நிலத்தில் உழவு விட்ட டிராக்டர் போல விளாசி தள்ளினார்கள் இஷ்டத்துக்கு. விட்டால் ஆயிரம் கோடி கலெக்ஷன் என்று சொன்னால் கூட ஆ வென்று வாயை பிளந்து கொண்டு நம்புகிற ரசிகர்களும்தான் இருக்கிறார்களே!
இந்த பேய் கூச்சலுக்கு கொஞ்சம் சாம்பிராணி போட்டு அடக்குவோம் என்று நினைத்திருக்கலாம். பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பேட்ட மற்றும் விஸ்வாசம் கலெக்ஷன் பற்றி ஒரு பேட்டி அளித்தார். பொல்லா பாவிங்க அதற்கப்புறமும் சும்மா இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. விஸ்வாசம் கலெக்ஷன் பற்றி அவர் குறிப்பிட்டதை அப்படியே கட் பண்ணிவிட்டு, பேட்ட பற்றி சொன்னதை மட்டும் வெளியிட்டார்கள்.
இந்த நிலையில்தான் விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ், ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் விஸ்வாசம் கலெக்ஷன் 125 கோடி! (இதற்கு பேட்ட தரப்பில் என்ன பதில் வைத்திருக்கிறார்களோ?)
இந்த நம்பர் கணக்கெல்லாம் தாண்டி ஒரு நிஜம் இருக்கிறது. அதுதான் இது.
ஓவர்சீஸ் வசூலை பொறுத்தவரை ரஜினிதான் டாப். தமிழக வசூலை பொறுத்தவரை அஜீத்தே டாப்! இப்படி ஒரு வரியில முடிய வேண்டிய விஷயத்தை ஏன்பா முடிய பிய்ச்சுக்குற அளவுக்கு குழப்புறீங்க?
கொய்யால கடைசி வரைக்கும் 125 கோடி எப்படி கலெக்ட் பன்னுச்சுனு சொல்லாமலே மழுப்பிட்டாப்ல @kjr_studios ஆனா சிட்டி கலெக்ஷன் மட்டும் ட்ரான்ஸ்பரன்டா இருக்குனு ஒத்துக்கிட்டாப்ல. அங்க பேட்ட தான் லீடிங் huge margin ல. கடைசில அஜித்த சீமான் ரேஞ்சுக்கு கொண்டு வந்து விட்டான் கே.ஜே.ஆர் . விஸ்வாசம் பட நஷ்டத்துக்கு ஈடு கட்ட இன்னொரு படம் நடிச்சு கொடுக்கிறாராமே அஜித் ,அதனால தான் இந்த @kjr_studios இப்பிடி முட்டு கொடுக்கிறான். கலெக்சன் அதிகம மாதிரி காட்டிகிட்டா தான் படம் கொடுப்பாங்க போல … KJR க்கு அஜித் போனி கபூர்க்கு அப்பறம் ஒரு படத்தை தயாரிக்க call sheet குடுத்ததுதான் மேட்டராம் அதான் அந்த சென பன்னி நன்றி விஸ்வாசத்தை ஆமை வடையா அடிச்சு உட்டு காட்டுது.
பேட்ட தமிழகத்தில் மட்டும், கிட்ட தட்ட 600+ திரைககளில் வெளியிட்டதாக க்யூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதே நிறுவனம் உலகம் முழுக்க விஸ்வாசத்தை வெறும் 543 திரைகளில் வெளியிட்டதாகவும் அறிவித்தது. தமிழகத்தில் மட்டும் 450+ திரையரங்கங்களே விஸ்வாசத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. விஸ்வாசம் டீம் கூறிய வசூல் சாதனைகள் அனைத்தும் பொய் என இங்கேயே நிரூபணம் ஆனது.
படம் வெளியாகி ஒருவாரம் கழித்து, முறையாக தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ‘பேட்ட’ ரேஸில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், வரும் வார இறுதிக்குள் தமிழகத்தில் மட்டுமே 100 கோடி வசூல் செய்துவிடும் என்றும் அறிவித்தார். அப்படி வசூல் செய்யும் தருவாயில் மிகக் குறுகிய காலத்தில் 100 வசூல் செய்த முதல் படமாக பேட்ட இருக்கும் என்றும் கூறினார்.
அது போக, ‘பேட்ட’யை உலகளவில் வெளியிட்ட மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனமும், இந்தியா தவிர மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த வசூல் 65 கோடி என முறையாக அறிவித்தனர். இந்த நிலையில் விஸ்வாசம் குழு தங்கள் படம் 125 கோடியை ஏற்கனவே அதாவது 8 நாட்களிலே வசூல் செய்து விட்டதாக அறிவித்தனர்.
25 கோடி என்பது தமிழ் திரையுலக வசூல் வரலாற்றில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பாகுபலி-2 வின் மொத்த வசூலாகும். இதனை கேட்ட பலர் சிரித்து கேலி செய்து வருகின்றனர்.#Visvasam125crvadai என்ற டேக் உருவாக்கப்பட்டு, இந்தியா தாண்டி உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.
வசூல் விவரங்களை தயாரிப்பு தரப்பில் மட்டுமே வெளியிட முடியும் என்றாலும், வெறும் 450+ திரைகளில் விஸ்வாசம் படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படும் தொகை மிகப்பெரிய கேலிக்கூத்து. நமக்கு தெரிந்த வரை ஆன்லைனின் டிக்கெட் விற்கும் தளங்களை வைத்து பார்க்கும் போது எல்லா ஊர்களின் பெரிய திரைகளில் பேட்ட அதிக காட்சிகளும் , அதிக புக்கிங்கும் இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.
ஆன்லைன் புக்கிங் நிறுவனங்கள் கொடுத்துள்ள வசூல் விவரங்களில் விஸ்வாசம் ‘பேட்ட’ யை நெருங்கக் கூட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது இது ரஜினியின் இமேஜை சரிக்க நினைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
ரஜினியை வென்று விட்டோம் என்ற அற்ப சந்தோசத்திற்கு விஸ்வாசம் குழு ஆசைப் படுவதாகத்தான் தெரிகிறது. தமிழ் நாட்டில் ரஜினியின் மாஸ் என்றுமே குறையாது, அவர் சிம்மாசனத்தை கமல் ஹாசன், மோகன், ராமராஜன், விஜயகாந்த், பாக்யராஜ், விஜய் என எந்த சீசனிலும், யாராலும் அசைக்க முடியவில்லை.
40 ஆண்டுகளாக கேட்டு சலித்துப் போன ஒன்று “ரஜினி அவ்வுளவுதான்” என்ற விமர்சனங்கள். அரசியல் அறிவிப்பிற்கு பிறகு அவருக்கு மாஸ் குறைந்து விட்டதாக சிலர் கூறினாலும், அது பொய் என, 2.0 மற்றும் பேட்ட படங்களின் மிகப் பெரிய வெற்றி அடித்துச் சொல்கிறது.
நேர்மையான வெற்றியே என்றென்றும் நிலைத்து நிற்கும், அது சூப்பர் ஸ்டாரின் உண்மையான வெற்றி- தலைவர்டா …
தமிழ்த் திரைப்படங்களின் வசூல் மன்னன் ‘ராஜாதி ராஜா’ ரஜினிகாந்த் மட்டுமே!
பேட்ட தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி என சொல்லலாம். இப்படம் தமிழகத்தில 220 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம்.
தமிழ்சினிமாவில் இதுவரையாரும் செய்யாத சாதனையை தற்போது 2018 மற்றும்2019ல் நிகழ்த்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் சென்றவருடம் வெளியான #2point0 மற்றும் இந்த வருடம் வெளிவந்த பேட்ட படம் இந்த இரண்டுபடங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உலகளவில் வசூல் சாதனையை படைத்துள்ளது!
தலைவர் ரஜினியோட கடைசி 4 படங்களோட வசூல் சுமார் 1600 கோடிக்கு மேல,ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயசுல மனுஷன் ரெக்கார்ட்ஸ் கிரியேட் பண்ணிட்டு இருக்காரு,அதுவும் வேற லெவல்ல, தமிழ்சினிமால இப்படி எல்லாம் ஒரு வசூல் சாதனைகளை நிகழ்த்த தலைவரே தான் மறுபடியும் பொறந்து வரனும் போல,
பேட்ட வெளியிட்ட திரை அரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாம் திகட்ட திகட்ட ஸ்வீட் சாப்பிடுறாங்க..
இவ்ளோ பேரு முதுகுக்கு பின்னாடி திட்டிருக்காங்கன்னு தெருஞ்சும் இப்போ வர ஒரு வார்த்தை அவுங்களை எங்கயும் திட்டுனது இல்ல அதான் சூப்பர் ஸ்டார் ரஜினி…