மாதவன் சந்தானம்! ஒரு முட்டல் மோதல்!
சந்தானத்திற்கும் மாதவனுக்கும் சட்டினிக்கும் இட்லிக்கும் நடுவில் இருக்கிற சம்பந்தம் கூட இல்லை! இவரும் அவரும் ஒரே பீல்டில் இருக்கிறார்கள் என்பதை தவிர உருப்படியான ஒரு நட்பும் இல்லை. அப்படியிருக்க… “அந்தக் கதையை நீங்க எடுக்கக் கூடாது” என்று சந்தானத்திடம் பாய்ந்தால், அவரும் திருப்பி பாய்வாரல்லவா?
பல்லாள தேவனுக்கும், பாகுபலிக்கும் இருக்கிற பகையை விட பலே பகையாகிவிட்டது ஒரு போன் பேச்சு! ஏனிந்த மோதல்?
வேறொன்றுமில்லை. சற்குணம் தயாரித்து இயக்கும் படத்தில் மாதவன் நடிக்கவிருக்கிறார் அல்லவா? அது லைப் ஆஃப் பை என்ற ஹாலிவுட் படம் சாயலில் எடுக்கப்படவிருக்கிறதாம். மாதவனும் ஒரு புலியும் ஒரே இடத்தில் சிக்கிக் கொள்ள, எப்படி புலியிடமிருந்து மாதவன் மீண்டார் என்பதுதான் அப்படத்தின் நாட். அதே போலொரு கதையில் நடிக்கப் போகிறார் சந்தானம். அதற்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகளை மூன்று மாதங்களுக்கு முன்பே துவங்கி பரபரவென நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தை சற்று தாமதமாக தெரிந்து கொண்ட மேடி, சந்தானத்தை தொடர்பு கொண்டாராம்.
“அப்படியொரு கதையில் நான் நடிப்பதால், நீங்க விலகிக்கணும்” என்றாராம். அதிர்ச்சியான சந்தானம், “நீங்களும் நடிங்க. நானும் நடிக்கிறேன். யாரு படம் நல்லாயிருக்குன்னு ஜனங்க முடிவெடுக்கட்டும்” என்றாராம். அதிர்ச்சியான மேடி, இப்பல்லாம் சின்னப்பசங்களுக்கு மரியாதையே தெரியறதில்ல என்று வருத்தத்துடன் போனை வைத்தாராம்.
அட அண்ணணுங்களா… யாரோ உருவாக்கிய படத்தை கூச்சமேயில்லாமல் காப்பியடிக்கக் கிளம்பியிருக்கும் உங்களுக்குள் இப்படியொரு புலவருங்க சண்டை தேவையா?
https://youtu.be/5VKw-bajmIk