ரஜினி மகள் சவுந்தர்யா மறுமணம்! மாப்பிள்ளையும் சினிமா ஹீரோதான்!

காதல் ஒருமுறைதான் பூக்கும் என்று எவன் சொன்னது? மனசுக்கு மறு சான்ஸ் கொடுக்கிற வழக்கம் இருந்தால் போதும். மறுபடியும் நந்தவனத்தில் பூ பூக்கும்! அதைதான் நிரூபித்திருக்கிறது சவுந்தர்யாவின் மனசு.

அஸ்வின் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சவுந்தர்யா ரஜினிகாந்த். ஏதோ மனக்கசப்பு. சட்டப்படி பிரிந்துவிட்டார்கள். இந்த கோடை வெப்பத்தில்தான் குளிர் வீசியிருக்கிறது. வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்த விசாகன் என்பவருக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. பப்புகளில் மீட் பண்ணிக் கொண்ட இருவரும் படுவேகமாக காதலை வளர்த்திருக்கிறார்கள். விசாகனும் ஒரு டைவர்சி என்பதுதான் ஆச்சர்யம்.

அபெக்ஸ் என்கிற மிகப்பெரிய மருந்து நிறுவனத்தின் அதிபரான விசாகன், மிகப்பெரிய கோடீஸ்வரரும் கூட! எம்.பி.ஏ படித்திருக்கும் இவர், அமெரிக்க, லண்டன் போன்ற நாடுகளில் முறையாக நடிப்பு பயிற்சியும் பெற்றிருக்கிறார். சில தினங்களுக்கு முன் ரஜினி வீட்டில் எளிமையாக நடந்தது திருமண ஒப்பந்த விழா.

கல்யாணம்? ஒரு மாதத்திற்கு பிறகு நடத்த திட்டமாம். ஊரைக் கூட்டி ஆர்ப்பாட்டம் செய்வதைவிட, குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இந்த திருமணத்தை நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இருமனமும் ஒரு மனம் ஆகி நீடுழி வாழ்க!

1 Comment
  1. Raja says

    கடவுள் ரஜினி அவர்களின் ஆசியோடு மணமக்கள் நீடுழி வாழ எனது இறைவன் ரஜினி அவர்களை வேண்டி கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஊருக்குள்ள பிரச்சனைன்னா சிம்பு குரல் கொடுப்பார்! சிம்புவுக்கு பிரச்சனைன்னா?

Close