கங்கை அமரனையும் கலகலப்பையும் தனித்தனியாய் பிரிக்க வேண்டும் என்றால், அதற்கு சூரசம்ஹாரம் எடுத்து வந்தாலும் முடியாது. துக்கமோ...சந்தோஷமோ... மனதில் இருப்பதை கொட்டி, மற்றவர்கள் தலையிலும் லாவமாக குட்டி, ஒரு களேபர கச்சேரியே நடத்திவிடுவார்.
தாராள பணப்புழக்கத்தையும் ஒழித்தாயிற்று... இனி கோடம்பாக்கத்தில் வருஷத்திற்கு 150 படம் என்கிற எண்ணிக்கை அப்படியே சுருங்கி சுண்டைக்காய் ஆகிவிடும். தியேட்டர் கிடைக்காமல் அல்லாடி வரும் அத்தனை பேருக்கும் தாராளமாக தியேட்டர் கிடைக்கும்.