உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு! கன்னட மண்ணில் பொங்கிய விஷால்!

நியாயமாக அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை விஷால் செய்திருக்கிறார். அதுவும் துணிச்சலாக!
காவிரி நீரை பெறுவதில் ஜெயலலிதா காட்டிய துணிச்சலை வேறு முதல்வர்கள் காட்டியிருப்பார்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும். காவேரி பிரச்சனையில் வாய் திறக்கவே அஞ்சும் அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் “இனிமேலாவது உரிமைக்குரல் எழுப்புங்கப்பா” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் விஷால்.
பெங்களூருவில் நடந்த ஒரு சினிமா விழாவுக்கு சென்ற விஷால், சிங்கத்தின் குகையிலேயே நின்று கூவியது தமிழகத்தை மட்டுமல்ல… கர்நாடகாவையும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. ரகுவீரா என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் விஷால்.
பெங்களூருவில் பயங்கர போக்குவரத்து நெரிசலால் விஷால், விழாவுக்கு செல்ல கொஞ்சம் காலதாமதமானது. இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு விஷால் வர காலதாமதமானதால், அவ்விழாவில் கலந்து கொண்ட சில கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழர்களைப் பற்றி காரசாரமாக பேசினார்கள். “தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதே வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை” என்று தங்களுடைய பேச்சில் குறிப்பிட்டார்கள்.
அதனை தொடந்து இவ்விழாவில் விஷால் பேசும் போது, “உடல் மண்ணுக்கு… உயிர் தமிழுக்கு என்று பேச ஆரம்பித்தார். “போக்குவரத்து நெரிசலால் இங்கு வருவதற்கு காலதாமதமாகிவிட்டது. கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன். தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது என்பது தமிழர்களுடைய உரிமை. அதனை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.
“நாம் அனைவரும் இந்தியாவில் இருக்கிறோம். எங்களுடைய உரிமையைக் கேட்கிறோம், அதை தவறு என்று எவராலும் சொல்ல முடியாது. அதே வேளையில், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உங்களுடைய கடமை. அதேபோல் தமிழகத்திலும் கர்நாடக மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை. மொத்தத்தில் அனைவருமே இந்தியர்கள். வெவ்வேறு மாநிலம் என்று பார்ப்பது அவசியமற்றது. இந்தியா என்று வரும் போது அனைவருமே ஒன்று தான். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. ஏன் தமிழர்கள் என ஒதுக்கி, தண்ணீர் தர மாட்டோம் என்கிறீர்கள். கர்நாடகாவுக்கு மட்டுமே தண்ணீர் என்று கிடையாது. எங்களுக்கும் உரிமையிருப்பதால் கேட்கிறோம். தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. கர்நாடகாவிலிருந்து எந்தவொரு தயாரிப்பாளரும் தமிழகத்துக்கு வந்து படம் தயாரித்தால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிப்போம். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்திலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் கண்டிப்பாக செய்து தர தயாராக இருக்கிறோம்” என்று பேசினார் விஷால்.
ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது அவரை சூழ்ந்து கொண்ட கன்னட வெறியர்கள் ‘தமிழ் ஒழிக’ என்று சொல்ல சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தபோது துணிச்சலாக மறுத்தவர் அவர். பல வருஷங்களுக்குப் பின் கன்னட வெறியர்கள் மத்தியில் ஜெ.வை போல ஒரு துணிச்சலான செய்கை விஷால் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.
விஷாலின் திமிர் தொடரட்டும்…
https://youtu.be/aNQZdkIfD1E

puratchi thalaivar, puratchi thalavi, valiyil puratchi thalapathiyo
sila karuththukkalai thaviththu ithattu seeman paratta vittal avarum inavathiye