விஜய்யிடம் கற்றுக் கொள்வாரா ரஜினி? தூத்துக்குடி துக்கமும் ஆறுதலும்!

மக்களின் துக்கத்தில் பங்கெடுக்காத எந்த கலைஞனும் மனுஷனே இல்லை! அதையும் விளம்பரம் இல்லாமல் செய்வதற்கு ஒரு பக்குவம் வேண்டும். அதை நேற்று விஜய்யிடம் பார்த்து சிலாகித்துவிட்டது மீடியா.

கடந்த வாரம் ஊரையே கலங்கடித்துவிட்டு தூத்துக்குடி சென்ற ரஜினியின் பயணத்தையும், யாருக்குமே தெரியாமல் நள்ளிரவில் போய் இறங்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவியும் ஆறுதலும் வழங்கிவிட்டு வந்த விஜய்யின் பயணத்தையும், ஒப்பிட்டாக வேண்டிய நேரமும் இதுதான்.

குண்டடிபட்டு இறந்த ஸ்னோலின் என்ற பெண்ணின் தாய் இவ்வாறு சொல்கிறார். “ராத்திரி திடீர்னு ஒரு பைக் வந்து நின்னுச்சு. வீட்டுக்குள் ரெண்டு பேர் வந்தாங்க. அதில் ஒருவர் நடிகர் விஜய். நாங்க இதை எதிர்பார்க்கவே இல்ல. எங்க கையை பிடிச்சுகிட்டு எங்க துக்கத்துக்கு ஆறுதல் சொன்னார். ஒரு லட்ச ரூபாய் நிதியும் கொடுத்தார். போட்டோ எடுக்கணும்னு நாங்க கேட்டப்ப “வேணாம்மா…” என்றும் சொன்னார். எங்க பிள்ளை மாதிரி வந்திட்டு போன விஜய்யை மறக்கவே முடியாது” என்கிறார்.

விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 85 லட்ச ரூபாய் காரில், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்திவிட்டு, 20 க்கும் மேற்பட்ட ஜிம் பாய்ஸ் துணையோடு ஆறுதல் கூறப்போன ரஜினிக்கும், விஜய்க்கும்தான் எவ்வளவு பெரிய வேறுபாடு?

6 Comments
  1. Anthanan says

    இப்படி போட்டோ, வீடியோ பிடித்து மீடியாவுக்கு கொடுக்குறது பப்லிகுட்டி இல்லையா சார். ரஜினி சொல்லிய கருத்தை முழுதாக புரிந்து கொள்ளாத முட்டாள் தமிழர் கூட்டந்தானே நீங்கள். போய் நாய் டம்ளர் சைமனுக்கும் டேனியல் காந்தி போன்ற டூபாக்கூர்களுக்கு சோம்பு தூக்குங்க

    1. சீலன் says

      டேய் நாங்கள் எல்லாம் எப்படா திருந்தப்போறோம், 50 வருஷமா சினிமாக்காரன்தான் நாட்டை ஆளனும் என்று ஊறின மண்டைங்கதான் நம்ம மண்டைங்க,

  2. tamilfan says

    Yarukkumey theriyama avar ponadhu, yeppadi medaikku mattum theirinjirukku!!!
    Ungala mattum kootitu poi padatha yeduthu vitrukaru.

    Rajiniya kevalama pesalaina ungalukku thookam varadhu

  3. Gnaavel says

    Joseph vijay is a christian fanatic. He has now helped an affected christian only. What about the help he has done to other affected hindus? Will you reply to this question?

  4. subramani says

    விஜய் கிறிஸ்டின் conversion propaganda பண்ணனறாருன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க அவர் அரசியல் எதிரிகள்

  5. Anthanan says

    டேய் புரட்சி நாய்ங்களா, போய் வேலைய பாருங்கடா – காலா பன்ச் டயலாக்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அசிங்கத்தை பார்த்தால் வாழ முடியுமா? வைகோவின் குப்பை பேச்சு!

Close