முஸ்லீம் தீவிரவாதிகளுடன் தமிழக, ஆந்திரா போலீசார் துப்பாக்கி சண்டை… தமிழக எல்லையில் பயங்கரம்…
ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் தமிழக போலீசார் 2 பேர் காயமுற்றனர். தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த போராட்டத்த்திற்கு பின்னர் மதியம் 2 மணியளவில் ஒரு பெண்ணும், 3 குழந்தைகளும் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். மதியம் 2. 30 மணியளவில் வீ்ட்டினுள் இருந்த பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில், ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இதனையடுத்து 12 மணி நேர ஆப்ரேஷன் முடிவுற்றதாக டி.ஜி.பி நரேந்திர பால்சிங் தெரிவித்தார். இன்றைய ஆப்ரேஷன் மூலம் நீண்ட ஆண்டு காலமாக தேடப்பட்டு வந்த 2 பேரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். 2 பேரையும் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர். சென்னைக்கு கொண்டு செல்வதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்த்தார்.
மீட்கப்பட்ட பெண் ஹசீனா பானு ( பிலால் மனைவி) என்றும், இவருடன் 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருந்ததாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் பா,ஜ.,பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பா.ஜ., நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., வை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று சென்னையில் பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் பிலால் மாலிக் , பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சுட்டனர். கதவை தட்டியபோது 2 போலீசாரை அரிவாளால் வெட்டினர், இதில் இருவரும் படுகாயமுற்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் , பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது . இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவியது.
மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக போலீஸ்காரர் 2 பேர் காயமுற்றனர். முன்னதாக போலீசார் இறந்ததாக கூறப்பட்டது.
டேய் நாய யாருடா முஸ்லிம் தீவிரவாதி….காவி தீவிரவாதி
S u r musilm teroist bocz ur starting with Allah hu Akbar…… So it must call Islamic teroist.
if u agree LTTE, veerapna, moixt, naxal are all Hindu teroist, we to agreee this sendtence.