குளிர் விட்டுப் போச்சா அஜீத்? குமுற வேண்டியவர்கள் எங்கே?
இந்த செய்திக்கு நாம் வைத்திருக்கிற தலைப்பைதான் இன்று கூடிய தமிழ் திரையுலக அறவழி போராட்டப் பந்தலில் கேட்க முடிந்தது. காலை 9 மணிக்கு துவங்கி, மதியம் 1 மணிக்கு ஷார்ப்பாக முடிந்த இந்த நிகழ்ச்சியில், 12.55 க்காவது வந்து விடுவார் என்று காத்திருந்த கூட்டம், ‘அவரு திருந்த மாட்டாருப்பா. தமிழன் புத்திய செருப்பால அடிக்கணும்’ என்றபடியே கலைந்தார்கள். இவர்கள் குறிப்பிட்ட அந்த அவரு வேறு யாருமல்ல… கோடிக்கணக்கான ரசிகர்களின் மூச்சுக்காற்றில் இணைந்த அஜீத்தேதான்!
‘அவருக்கு குளிவிட்டுப் போச்சு. கேட்க யாரும் இல்லை’ என்று சில ரசிகர்கள் முணுமுணுத்தது காதில் விழுந்தது.
முதல் ஆளாக வந்த விஜய், சுமார் ஒரு மணி நேரம் அந்த பந்தலில் அமர்ந்திருந்தார். அருகிலிருந்த செல்வமணி அடிக்கடி ஜோக்கடிக்க… மேடை நாகரீகம் கருதி பல்லை கடித்துக் கொண்டு சிரித்தபடியே இருந்தது தனி. இளையராஜா, வைரமுத்து, கமல், ரஜினி, சத்யராஜ் என்று திரையுலக ஆளுமைகள் நேரம் செல்ல செல்ல மேடைக்கு வந்து சேர்ந்தார்கள். யாரும் மைக்கை பிடித்து பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பேசினால், உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என்கிற நல்ல எண்ணத்தில் வழங்கப்படாமல் இருக்கலாம்.
ஆனால், சும்மாவே உட்கார்ந்திருப்பதென்பது சூனியத்திலும் பெரும் சூனியமாச்சே? எப்படியோ நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
சிறிய இடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பதால், போலீஸ் பாடுதான் பெரும்பாடு. போக்குவரத்தை சரி செய்யவே முடியாத சூழ்நிலை. எனவே கண்டிப்பாக 1 மணிக்கு இடத்தை காலி பண்ண வேண்டும் என்பதை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள்.
பெப்ஸி தலைவர் செல்வமணி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோர் ஒப்புக்கு நாலு வார்த்தை பேசி சம்பிரதாயத்தை நிறைவு செய்யும் நேரத்தில், மைக்கை வலுக்கட்டாயமாக பிடுங்கி முழங்கினார் சத்யராஜ்.
கடந்த முறை இதே போல ஒரு மேடையில் அவர் ரஜினியை குறி வைத்து வெளுத்ததை போல இம்முறையும் வெளுப்பாரோ என்ற அச்சம் வந்துவிட்டது நாசர் விஷால் உள்ளிட்டோருக்கு. நல்லவேளை… அந்த தர்மசங்கடத்தை கொடுக்கவில்லை அவர்.
மேடையில் இருந்த முன்னணி நடிகர்கள் யாரும் தன் தடித்த நாக்கை பயன்படுத்தவில்லையே தவிர, மேடையில் ஏற்றப்படாமல் வெளியில் நின்று கொண்டிருந்து துணை மற்றும் துண்டு நடிகர்களின் பேச்சுதான் டாப்.
கைக்கு கிடைத்த சேனல் மைக்குகளில் எல்லாம், அறிவு பூர்வமாகவும், அனல் தெறிக்கவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் குரலுக்கே ஒரு மரியாதையும் இல்லை. இதில் இந்த துணை துண்டு நடிகர்களின் பேச்சா எடுபடும்? ஐயோ பாவம்.
பின் குறிப்பு- அஜீத்தை போலவே அந்த மேடைக்கு வராத நடிகர்களை பட்டியலிட்டால், அர்ஜுன், அதர்வா என்று கன்னட சாயம் அடிக்கிறது. (அட நீங்கள்லாம் ஒண்ணாதான் தமிழ் நாட்ல திரியுறீங்களா?)
நடிகன் அஜித்குமாருக்கு வருஷம் 50 கோடி தமிழ் மக்களின் காசு மட்டும் வேணும். தமிழ் மக்கள் பிரச்சனைக்கு மயிராண்டி வீட்டை விட்டு வெளில வரமாட்டான். இந்த லட்சணத்துல இளிச்சவா தமிழ் மக்கள் இவனையெல்லாம் தல தலன்னுட்டு தல மேல தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க. இப்பாவது இவன் உண்மை முகத்தை புரிந்துகொள்ளுங்கள்.
அஜித் பயந்தான்கொள்ளி. அஜித் தமிழ் இன உணர்வு இல்லாதவன். அவன் ஒரு கோழை .