ஜீவகாருண்ய பேரோளி அன்னை த்ரிஷா
அந்த நாயே நாலு சொட்டு கண்ணீர் வடிச்சு, த்ரிஷாவோட துப்பட்டாவுல துடைச்சுகிட்டாலும் ஆச்சர்யமில்ல. அப்படியொரு ஜீவகாருண்ய பேரொளியாக திகழ்ந்திருக்கிறார் த்ரிஷா. இந்த வருடம் தீபாவளி எப்படி என்று த்ரிஷாவிடம் கேட்டால், சே… ஏன்தான் இப்படி வெடி வெடிச்சு எங்க பேமிலி மெம்பர்ஸ் பாவத்தை கொட்டிக்கிறாங்களோ? என்கிறார். என்னவாம்?
அவர் பேமிலி மெம்பர்ஸ் என்று சொன்னது அவர் வீட்டு நாய்களை. பொதுவாகவே நாய்களுக்கு கேட்கும் திறன் அதிகம். நாம கேட்கிற அதே பட்டாசு சப்தம் அதுக்கு பல மடங்கா கேட்கும். என்ன பண்ணுறது? யாரையும் வெடிக்காதீங்கன்னு சொல்ல முடியாதுல்ல? அதனால் என் வீட்டு நாய்களின் காதுகளுக்கு பஞ்சு வச்சு பாதுகாத்தேன் என்றார்.
இப்படியொரு ‘அன்னை த்ரிஷா’ இருந்தால், தமிழ்நாட்ல ஆம்புலன்ஸ் சேவையை அறவே ஏறக்கட்ட வேண்டியதுதான்!