அவசரப்பட்டு கருத்து? அப்புறமா பொக்கே! தடதடக்கும் நடிகர்கள்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒப்பீனியன் போல் எக்ஸிட் போல் என்ற பெயரில் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதால் அவசரப்பட்டு கருத்துச் சொல்லி, இப்போது அடித்தொண்டை வறண்டு கிடக்கிறார்கள் நடிகர்கள். மூன்று முக்கிய ஆங்கில தொலைக்காட்சிகள் தனி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என்று தனது கருத்துக்கணிப்பில் சொல்லியிருந்தது.

அதை நம்பி தனது கருத்தை போல்டாக சொல்ல ஆரம்பித்துவிட்டார் விஷால். “மக்களுக்கு இலவசம் வேண்டாம். தொழில் வாய்ப்பை பெருக்குங்க. எல்லாருக்கும் இலவச கல்வியும் இலவச மருத்துவமும் கொடுங்க. அதுதான் நல்லது” என்றெல்லாம் சொல்லிவிட்டு போனார் ஓட்டுப்போட வந்த இடத்தில். அவர் சொன்னதில் நிறைய நியாயம் இருந்தாலும், கருத்து சொன்னால் ஏற்றுக் கொள்கிற மனநிலையிலா இருக்கும் அரசியல் மனசு!? ஐயோ கொடுமை… இந்த தேர்தலில் அதிமுக வின் வெற்றியை நிர்ணயித்ததே இலவசங்கள்தான் என்பதை சற்று லேட்டாகவாவது புரிந்து கொண்டிருப்பார் விஷால்.

இவராவது பரவாயில்லை. மக்கள் மீதிருக்கும் நிஜமான அக்கறையால் கொந்தளிக்கவே ஆரம்பித்துவிட்டார் சிவகுமார். “இரண்டு தலைமுறையே வீணாப் போச்சு. குடிச்சு குடிச்சு பல குடும்ப தலைவர்கள் செத்தே போயிட்டாங்க. ஏராளமான குடும்பங்கள் தெருவுக்கு வந்திருச்சு. ஒரு பக்கம் இலவசத்தை கொடுத்துட்டு இன்னொரு பக்கம் டாஸ்மாக் மூலமா புடுங்கனது போதும். யார் ஆட்சிக்கு வந்தாலும் முதல்ல மதுவிலக்கை கொண்டு வாங்க” என்றார் ஆவேசமாக. அவர் எந்தளவுக்கு ஆவேசப்பட்டாரோ, அதைவிட வேகமாக இன்று ‘முதல்வருக்கு வாழ்த்துக்கள்’ என்ற வாசகத்துடன் பொக்கே அனுப்பி வைத்தது சிவகுமார் பேமிலி. நடிகர் சங்கம் சார்பில் விஷாலும் பொக்கே அனுப்பி வைத்துள்ளார். இது ஒருபுறமிருக்க,

தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஒரு வியத்தகு அமைதியுடன் பொறுமை காத்த அஜீத்தும் விஜய்யும் இன்று பிற்பகல் செய்த முதல் வேலையே அம்மாவுக்கு பொக்கே அனுப்பியதுதான். ஆகக் கூடி மீண்டும் தடதடக்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். இந்த குழந்தைகள் செய்த சிறு விமர்சனத்தை பொருட்டாக கருதாமல் இருக்க வேண்டும் முதல்வர் ஜெ.. செய்வாரா… செய்வாரா?

பின்குறிப்பு- ப.சிதம்பரம் புத்தக வெளியீட்டுக்கு போனதற்கே கமல் பட்ட பாடு, சிவகுமார் விஷால் இருவருக்கும் தெரியாமலிருந்திருக்காது. ஸோ…. ?

1 Comment
  1. roja says

    என்ன செய்ய கருத்து சுகந்திரம் இல்லாத நாட்டில ரஜனி மாதிரி இர்ருக்க வேண்டும்.
    Star cricket showவை சன் டிவிக்கு கொடுத்தது.. அம்மா மறந்திருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்.
    அம்மா இந்த முறையாவது பலி வாங்கும் நடவடிக்கையை விட வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
EN APPA – Ramya speaks about her father

Close