ராதிகா மேம்… கொஞ்சம் இந்தப் பக்கமும் பாருங்க!
சின்னத்திரையின் மகாராணி என்றால் அது ராதிகாதான்! இது சீரியலா, இல்ல சீரியல் பேர்ல ஓடுற சினிமாவா? என்று இல்லம் தோறும் வியக்கிற அளவுக்கு இருக்கிறது அவற்றின் நேர்த்தியும் விறுவிறுப்பும். இது ஒருபுறம் இருக்க, புதிதாக ஒரு சரித்திர சீரியலையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாகுபலி ரேஞ்சுக்கு இருக்கிறதாம் அதன் கிராபிக்ஸ். ராதிகாவே ஹீரோயினாக நடிக்கிறார். சின்னத்திரையில் ஒரு பாகுபலி என்றே வர்ணிக்கிறார்கள் இது குறித்து அறிந்தவர்கள்.
இன்னும் வராத சீரியலுக்கு இவ்வளவு பாராட்டா என்று இப்பவே முகம் குளிர்ந்திருக்கிறார் ராதிகா.
பட்… இந்த சந்தோஷம் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் இருக்க வேண்டும் அல்லவா?
கதை விவாதக்குழு, கதையாசிரியர்கள், வசன உதவியாளர்கள் போன்ற யாருக்கும் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வரவில்லையாம். “பிள்ளை குட்டி பிரச்சனை வாடகை என்று நாட்களை கடத்தும் நாங்கள், எங்க பிரச்சனையை கதையாக எழுதினாலே ஏழு தலைமுறைக்கு கைதட்டல் கேட்கும் போல” என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
ராதிகாவை நேர்ல பார்த்து பிரச்சனையை சொல்லணும் என்று நினைத்தாலும், நடுப்புற நந்திகள் வழியை அடைத்துக் கொள்கிறார்களாம். ராணியம்மா… கேட்குதா? கேட்குதா?
ராதிகா என்றால் ஏண்டா இப்படி பம்முற. அவள் செய்தது தவறு. அதை சுட்டிக்காட்ட திராணி இல்ல உனக்கு.