அஜீத் கைவிரிப்பு! சிம்பு இருக்காரே…! வெங்கட்பிரபு விறுவிறு…
ஒருவரும் நடிக்க வரலேன்னுதான் தானே ஹீரோவானார் சசிகுமார். அதற்கப்புறம் சுப்ரமணியபுரம் ஓடிய ஓட்டத்தில் இன்று ஏழு கோடி சம்பள ஹீரோவாகிவிட்டார் சசி. சினிமா அப்படிதான்! காக்கா மூக்குல கம்மலை மாட்டி, சோக்காக்கீதுப்பா… என்றும் சொல்ல வைக்கும்!
என்னதான் அஜீத் விஜய் லெவலுக்கு அடுத்த கட்ட ஹீரோக்கள் வருவதற்கு இன்னும் எத்தனை வருஷம் பிடிக்குமோ? ஆனால் எல்லாரும் அந்த இடத்தை நோக்கிதான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சிம்பு மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத திருப்பம்?
மங்காத்தா படத்தின் பார்ட்2 வில் நடிக்கப் போவதில்லை என்று திட்டவட்ட முடிவெடுத்துவிட்டார் அஜீத். இப்படி படீரென அவர் கதவை மூடியதால் பலத்த சேதாரத்திற்கு ஆளான வெங்கட்பிரபு, அடுத்து யாரை வைத்து கதையை நகர்த்தலாம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் சிம்பு மீது அவரது லுக் விழுந்ததாம். அஜீத் இல்லேன்னா என்ன? சிம்புவை வச்சு சமாளிப்போம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
சிம்புவும் இந்த திட்டத்திற்கு ஓ.கே சொல்லியிருக்கிறார். இருவரும் சேர்ந்து தயாரிப்பாளரை கொத்துவதுதான் முதல் வேலையாக திரிகிறார்கள். சேச்சே கொத்துன்னா அந்த கொத்து இல்லேங்க… இது வேற… புரட்யூசர் ஹன்ட்டிங்…!
To listen audio click below:-