இனிமே நடிப்புதான்! கலை இயக்குனர் கிரண் முடிவு
திருதிரு துறுதுறு’, தொடங்கி ‘கோ’, அனேகன்’, ‘3’, ‘மயக்கமென்ன’, ‘குப்பி’, ‘வாமணன்’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘இரண்டாம் உலகம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியவர் டி.ஆர்.கே. கிரண். அவ்வப்போது சிறுசிறு வேடங்களிலும் நடித்து வந்த டி.ஆா்.கே கிரண், இப்போது முழுநேர நடிகராக மாறியிருக்கிறார்.
விஷாலின் ‘பாயும் புலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், சி.வி.குமார் தயாரிப்பில் நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் பெயரிடப்படாத படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜீவா – இயக்குநர் ராம்நாத் கூட்டணியில் ‘திருநாள்’ படத்திலும் நடித்துவருகிறார்.
அத்துடன் ‘வேலையில்லா பட்டதாரி – 2படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கும் டி.ஆர். கே. கிரண் மேலும், மூன்று புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். சின்னத்திரையில் கலை இயக்குநராக பணியைத் தொடங்கியவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களிலும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் கலை இயக்குநராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பிலும் பல நூறு படங்கள் காண, கிரணுக்கு வாழ்த்துகள்..!