ஏதோ… மனைவியால் முடிஞ்சது! நட்பை கெடுத்த உறவு

‘தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை முன்பு போல கொடுப்பதில்லையாம்…’ இன்டஸ்ட்ரி முழுக்க பரவியிருக்கும் நட்பு வைரஸ் இதுதான். அதை நிரூபிப்பதை போல விஜய் சேதுபதியை தனது தயாரிப்பில் நடிக்க வைக்கவும் இருக்கிறார். இந்த படத்தில் சிம்புவும் நடிப்பார் என்கிறது கூடுதல் தகவல்கள். யாரு படத்துல யாரு வேணும்னா நடிச்சுட்டு போகட்டுமே, அதுக்கென்ன? என்று அலட்சியம் காப்பவர்களுக்கு வேண்டுமானால் இது சாதாரண செய்தி. ஆனால்…?

தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் இந்த நால்வரையும் ஓயாமல் நோட்டமிடும் இன்டிவிஜூவல் உளவுத்துறை பார்ட்டிகளுக்கு மட்டும், இந்த நட்பும் அதற்குள் புடைத்துக் கொண்டு நிற்கும் வம்பளப்பும் பளிச்சென புரிந்து விடும். தனது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு பைனான்ஸ் கேட்டு போன இடத்தில்தான் முதல் அசரீரி ஒலித்தது தனுஷுக்கு. ‘உங்களுக்கு பைனான்ஸ் தர முடியாது. வேணும்னா நீங்க சிவகார்த்திகேயனை வைச்சு எடுக்கிறீங்களே, டாணான்னு ஒரு படம். அதுக்கு தரட்டுமா?’ என்று அந்த பைனான்ஸ் பார்ட்டிகள் முதல் சங்கை ஓதி வைக்க, அதற்கப்புறம்தான் இந்த நட்பில் பெரிய சைசில் ஒரு டமால் விழுந்ததாக கூறப்பட்டு வந்தது.

‘அதெல்லாம் இல்லீங்க. நடந்த கதையே வேறு’ என்கிறது உளவு புலிகளின் உள் வட்டார தகவல். என்னவாம்? கடந்த வாரம் தனது ‘வேலையில்லா பட்டதாரி’ பட வேலையில் பிஸியாக இருந்தாராம் தனுஷ். அப்போது அவரது மனைவி ஐஸ்வர்யா போன் செய்தாராம். எடுத்த எடுப்பிலேயே ‘உங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்’ என்கிற டைப்பில்தான் ஆரம்பித்ததாம் உரையாடல். ‘தேவையில்லாம அந்த பையனை வளர்த்துவிட்டீங்க. இப்போ என்னாச்சு பார்த்தீங்களா?’ என்று அவர் கோபப்பட்டதாக கூறுகிறார்கள்.

அந்த பையன் அந்த பையன்னு அவர் சொன்னது யாரை? இதுதான் கேள்வி. ரொம்ப வளைச்சு வளைச்சு கேட்டீங்கன்னா, ‘எங்க வீட்ல கார் துடைக்க வந்த பையனை பற்றி பேசிட்டு இருந்தோம். அத பற்றி உங்களுக்கு என்ன? என்று கூட சமாளிக்கலாம்.

2 Comments
  1. dinesh says

    Dhanush market sarinchathuku karanam sivakarthikeyan illa..dhanush sariyana kathaia choose pannalla athan reason…if dhanush help pannalanalum siva will grow..no one can stop him.

  2. Tamilan says

    dei super star rajiniyai paththi pesada.

    Rajini is our God.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அப்படியெல்லாம் யாரையும் நோகடிக்காதீங்க… விக்ரமுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அட்வைஸ்

இந்த தலைப்புக்கு பின்னால் ஒரு கடலளவுக்கு சோகம் இருக்கிறது. அதை முருகதாஸ் வாயாலேயும் கேட்க முடியாது. விக்ரமும் சொல்ல மாட்டார். ஆனால் நடந்த உண்மைகள் நடந்தவைதானே? அதை...

Close