உதயநிதியிடம் உதவி கேட்ட ஹன்சிகா மம்மி
ஹன்சிகா மறந்தும் சிம்புவை நினைத்துவிடக் கூடாது என்பதில் கன கச்சிதமாக கட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் மம்மி. இம்மியளவும் குறையாத அவரது இன்டர்போல் அறிவுக்கு நடுவே சிம்பு என்ன, அவரது சீப்பு கூட உள்ளே நுழைய முடியாது போலிருக்கிறது. தொடர்ந்து ஹன்சிகாவை பரபரப்பாகவே வைத்திருக்க முடிவெடுத்திருக்கிற மம்மி, தமிழில் அடுத்ததாக சைன் பண்ணியிருக்கும் படம் உதயநிதி ஸ்டாலினுடையது.
‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அகமதுவின் அடுத்த படத்தில் நடிக்கிறார் உதயநிதி. இந்த படத்தை அவரது ரெட்ஜெயன்ட் நிறுவனமே தயாரிக்கிறது. இதில்தான் மீண்டும் ஹன்சிகாவுடன் இணைகிறார் அவர். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவிருக்கும் படத்தில் லட்சுமிமேனனுடன் வில்லேஜ் ரோலில் ஆட்டம் போடப் போகும் உதயநிதி இந்த படத்தையும் ஒரே நேரத்தில் துவங்கும் எண்ணத்திலிருக்கிறார்.
முதல்ல சந்தானம் டேட்ஸ் இருக்கா பாருங்க என்று கூறிவந்த உதயநிதி, அவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு அந்த இடத்திற்கு வேறொரு ஈக்குவல் காமெடியனை கொண்டு வந்தேயாக வேண்டும். ஆனால் சூரியிடம் இருக்கும் கிராமத்தான் லுக்கை மாற்றி நகரத்தானாக்க முடியுமா என்று திகைத்து வருகிறாராம் இயக்குனர் அகமது. யார் வந்து சந்தானம் இடத்தை நிரப்ப போகிறார்களோ? அது போகட்டும்…
ஓ.கே ஓ.கே படத்தில் ஹன்சிகாவுக்கு கொடுத்த சம்பளத்தை விட சற்று அதிகமாகவே கொடுக்கிறார்களாம் இந்த முறை. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போல, இந்த சம்பளம் நயன்தாராவின் நண்பேன்டா சம்பளத்தை எட்டிக் கூட பிடிக்கவில்லை என்பதுதான் ஹன்சிகா கவலைப்பட வேண்டிய துணுக்!