நடு ரோட்ல வச்சு ‘கட் ’ பண்ணணும்! #metoo விஷயத்தில் வரலட்சுமி கொந்தளிப்பு!

இனி நாசுக்காக பேசி நரி சிரிப்பு சிரிக்கும் வக்கிர ஆண்களின் பொக்கைப் பல் சிரிப்பு எடுபடவே எடுபடாது. அந்தளவுக்கு நடு ரோட்டில் வைத்து வேஷ்டியை உருவிவிட்டார் சின்மயி. #metoo என்ற ஹேஷ்டாக் மூலம் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தடவல்களை பகிரங்கமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள் பெண்கள். சின்மயி விஷயத்தில் நடந்தது என்ன என்பதை தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வர முடியாது என்றாலும், அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் சினிமா நடிகைகளில் வரலட்சுமியின் பேச்சில் எப்போதும் போல கம்பீரம் கம்பீரம்.

சித்தார்த், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி, சமந்தா போன்ற ஒரு சிலர் மட்டுமே சின்மயிக்கு ஆதரவாக கருத்து கூறியிருக்கிறார்கள். அதில் வரலட்சுமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி உண்மையாகவும் நியாயமாகவும் அதை தாண்டிய கோபமாகவும் அமைந்திருக்கிறது.

அதில் பேசிய வரு, “இந்த மாதிரி தவறுகள் சினிமா இன்டஸ்ட்ரியில் நிறைய இருக்கு. யாரும் யோக்யன் இல்லேன்னு கூட சொல்லிடலாம். நான் சினிமா குடும்பத்தை சேர்ந்தவங்கறதால சிறு வயசிலேயே இது போல நிறைய சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கேன். நானே நேர்ல பார்த்தும் இருக்கேன். பலரோட நிலைமை சொல்லவே முடியாது. இன்று அந்த கதைகளை திரும்ப சொன்னா பல குடும்பங்கள் உடைஞ்சுரும். எல்லாரும் எங்கெங்கோ நிம்மதியா இருக்காங்க. டான்சர்ஸ் யூனியன்ல ஒவ்வொருத்தரும் படுற வேதனையை நான் பார்த்திருக்கேன். ஒத்துக்கலேன்னா யாரும் வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க. ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் இப்படிதான் இருக்கு. இந்த குற்றங்களில் ஈடுபடுற எல்லாருக்கும் நான் ஆம்பளைங்கிற திமிரு இருக்கு. குற்றம் செய்யறவங்களை நடு ரோட்டில் வச்சு ‘கட்’ பண்ணிட்டா சரியாகிடும். இல்லேன்னா மலட்டு தன்மை வர்ற கெமிக்கல் ஆக்ஷன் எடுக்கணும்” என்றார் கடுகடுக்கும் கோபத்துடன்!

நிச்சயமா அரசியலுக்கு வருவேன். என் முழு நோக்கமும் பெண்களுக்கு பாதுகாப்பா இருக்கறதுதான் என்கிற வரலட்சுமியின் குரலில் அத்தனை கம்பீரம்!

1 Comment
  1. Thamniraman says

    appa pathavi very gult karuvaayanuthu fist.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வரலட்சுமிதான் ஃபர்ஸ்ட்! சந்தோஷக்கோழி விஷால்!

Close