வெங்கட் பிரபுவை கண்காணித்த சூர்யா! என்னாவொரு உஷாரு?

‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு மாசிலாமணி. எல்லாரும் அவரை மாஸ் மாஸ்னு கூப்பிடுவாங்க. அதையே டைட்டிலா வச்சுட்டோம்’ என்றார். (க்ளியர்?)

சரி, படம் உருவான கதை என்ன? ‘பொதுவா நம்ம படத்துல கதைன்னு ஒண்ணு இருக்குமா? (லந்து!) ஆனால் இந்த படத்தின் ‘நாட்’டை ஒருநாள் ரொம்ப சாதாரணமா ஞானவேல்ராஜாகிட்ட சொன்னேன். ‘நல்லாயிருக்கு. சூர்யாவுக்கு இதை சொல்லலாமே’ன்னு சொன்னார். அங்க ஆரம்பிச்சுது டென்ஷன். சூர்யா மாதிரி ஒரு மாஸ் ஹீரோ பண்ணும்போது, இப்ப நாம சொன்ன ‘நாட்’ தாங்காதுன்னு தோணுச்சு. என்னுடைய முன்னாள் உதவி இயக்குனர்களும், இப்போ இயக்குனர்களா இருக்கிறவங்களையும் வரவழைச்சேன். தெலுங்குல ராஜமவுலிகிட்ட வொர்க் பண்ணுற ஒருத்தரை கூப்பிட்டுகிட்டேன். ரொம்ப சீரியஸ்சா நாங்க பண்ணின கதைதான் இந்த மாஸ். கடைசியில பார்த்தா… முதல்ல நான் ஞானவேல்ராஜாகிட்ட சொன்னா நாட் இதுல வரவேயில்ல’.

‘நான், சூர்யா, வெங்கட்பிரபு, யுவன், எல்லாம் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். படிக்கும்போது கூட கொஞ்சம் ரிசர்வ்டாதான் இருப்பார் சூர்யா. இப்ப படம் பண்ண போறதுக்கு முன்னாடியும் அப்படிதான் இருப்பார்னு நினைச்சேன். ஆனால் ஸ்பாட்ல அவ்வளவு ப்ரண்ட்லியா இருந்தார். ஷாட் முடிஞ்சதும் எப்பவும் கேரவேனுக்கு போய்டுவாருன்னு சொன்னாங்க. அவர் போகல… எங்க கூடவே உட்கார்ந்து நாங்க அடிக்கிற அரட்டைய ரசிக்க ஆரம்பிச்சிட்டார். வழக்கமா எனக்கு ஒளிப்பதிவாளரா இருக்கிறவர் இந்த படத்தில் இல்ல. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செஞ்சுருக்கார். நான் பண்ணிய படங்கள்லேயே ரொம்ப கலர்புல்லான படம் இதுதான். தமிழ்சினிமா இப்போ ஆவி, பேய் சீசன்ல இருந்தாலும், இந்த ஆவிக் கதை இதுவரை வராத கோணத்துல இருக்கும்’ என்றார்.

‘நான் கேரவேனுக்கு போகாததுக்கு ஒரு காரணம் இருக்கு. ஷுட்டிங் ஆரம்பிச்ச நாளில் இருந்தே இவங்க வேலை செய்யுற விதம் எனக்கு பயமாயிருச்சு. எந்நேரமும் அரட்டையடிச்சுகிட்டே இருக்காங்களே… வேலை நடக்குமான்னு பயம் வந்துருச்சு. இவங்க ஒழுங்கா வேலை செய்யுறாங்களான்னு கண்காணிக்கதான் நான் கேரவேனுக்கு போகாமல் ஸ்பாட்லேயே உட்கார்ந்துட்டேன்’ என்றார் சூர்யா. (பார்றா) படத்தில் சூர்யாவுக்கு ஜோடி நயன்தாரா. அவங்களுக்கும் பேய் கேரக்டரா என்றால், யூனிட்டே மந்திரிச்சு விட்டது போல கமுக்கமாக இருக்கிறது.

நயன்தாராவையெல்லாம் பேயா காண்பிச்சா, அதற்கப்புறம் எல்லாரும் சுடுகாட்டு பக்கத்துல லவ் லட்டரோட திரிவாய்ங்க… பார்த்துக்கங்க வெங்கட் பிரபு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அனிருத் குஷிக்கு அணை போட்ட படம்! அப்செட்டில் குட்டி ரஹ்மான்?

அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார் அனிருத். அவரது சம்பளம் ஒரு கோடி என்றும் இல்லையில்ல ரெண்டு கோடி என்றும் கோடம்பாக்கம் தாறுமாறாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு பொருத்தமாக...

Close