ரசிகரின் மரணம்! விஜய் நேரில் அஞ்சலி!

தனது ரசிகர்களை போஸ்டர் ஒட்டுவதற்கும், ட்விட்டரில் சண்டை போடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வரும் சில நடிகர்களுக்கு மத்தியில், விஜய் செலுத்திய அன்பாலும் மனிதாபிமானத்தாலும் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். தொண்டையை அடைக்கிற துக்கத்திலும், விஜய் செய்த ஒரு செயல் அவர்கள் அத்தனை பேரையும் துக்கத்தை தாண்டி ஆனந்தம் கொள்ள வைத்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் இமயம் ரவி மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவரது உடல் ஒரு ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மூவரை கைது செய்து விசாரித்து வருகிறது போலீஸ். இந்த மரணம் விஜய் ரசிகர்களை ஒரு உலுக்கி உலுக்கியிருக்கிறது. இதையடுத்து இறந்துபோன இமயம் ரவி வீட்டிற்கு நேரடியாகவே சென்று துக்கம் விசாரித்தார் விஜய்.

அவ்வப்போது மாவட்ட தலைநகரங்களுக்கு விசிட் அடிப்பது. ரசிகர்களை சந்திப்பது என்று பரபரப்பாக இருக்கிற விஜய் நாட் ரீச்சபுள் என்கிற பேச்சுக்கே இடமில்லாத வகையில் நடந்து கொள்கிறார். தனது பலமே ரசிகர்கள்தான் என்று வெற்றுப் பேச்சு பேசாமல் அவர்களுக்கான மரியாதையை செயலிலும் காட்டிவரும் விஜய் பாராட்டத்தகுந்தவர்தான்!

https://youtu.be/lawYZ98rfTU

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சாந்தனுவே நடிக்கட்டும்! விட்டுக் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

Close