ரஜினி சார் கோச்சுப்பாரே…! விஜய் விழாவில் கலந்து கொள்ள அஞ்சும் ஹீரோக்கள்?
ஆகஸ்ட் 15 ந் தேதி மதுரை குலுங்கப் போகிறது. குலுக்குகிறவர்கள் விஜய் ரசிகர்களாக மட்டும் இருக்கப் போவதில்லை. கோடம்பாக்கத்தின் லப்பை சப்பை ஹீரோக்களின் ரசிகர்களாக இருந்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏன்? விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப் போகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கோடம்பாக்கத்தின் அத்தனை ஹீரோக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
குமுதம் வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில்தான் நடிகர் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை வழங்கியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த ரிசல்ட் வந்த பின்பு உலகம் முழுக்க நடந்த உள்நாட்டு கலகம் கொஞ்சம் நஞ்சமல்ல! அஜீத் விஜய் ரசிகர்கள் கோதாவில் குதிக்க, ‘அட போங்கப்பா..’. என்று அலுப்புடன் ரசித்துக் கொண்டிருந்தார்கள் ரஜினி ரசிகர்கள். அவர்களை பொறுத்தவரை அந்த கிரீடத்திற்கு பொருத்தமான தலை ரஜினியுடையது மட்டும்தான்.
கரண்ட் நிலவரம் என்ன? ஆகஸ்ட் 15 ந் தேதி மதுரையில் ஒரு பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்து, அதில் நேரடியாக விஜய் கையில் இந்த பட்டத்தை வழங்க திட்டமிட்டிருக்கிறது குமுதம் நிர்வாகம். முதலில் தயங்கிய விஜய், தற்போது வருவதாகவும் ஒப்புக் கொண்டு விட்டாராம். இதற்கப்புறம்தான் ட்விஸ்ட்டே! இதே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி கோடம்பாக்கத்திலிருக்கும் டாப், மற்றும் லோ – டாப் ஹீரோக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
‘நாங்க வர்றது பற்றி ஒண்ணுமில்ல… ஆனால் ரஜினி சார் கோவிச்சுப்பாரேன்னுதான் பார்க்க வேண்டியிருக்கு’ என்கிறார்களாம் அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல. இருந்தாலும் முதலில் வர ஒப்புக் கொண்டிருப்பவர் ஜீவா சேட் மட்டும்தான் என்கிறார்கள். போக போக லிஸ்ட் நீளக்கூடும். ஆனாலும், ஆர்யா, சூர்யா, சந்தானம் வருவார்களா என்பதுதான் மதுரைக்கார மனசுகள் கேட்கும் ஒரே கேள்வி!
ஆனால் அவர்கள் உறுதியாக பதில் சொல்லாமல் மழுப்பிக் கொண்டிருப்பதாக கேள்வி…


super star vijay anna than…bakkiyaraj.G