வர்றேன்டா… வர்றேன். வசமா சிக்குனீங்க’ (இதய நோய் உள்ளவர்கள் இந்த புகைப்படங்களை தவிர்க்கவும்)
எப்போதும் ராஜ்ஜ்ஜ்ஜா… நீ எப்போதும் ராஜ்ஜ்ஜ்ஜா என்று தொண்டை ‘ஜா’வெல்லாம் ஜவ்வு மிட்டாயாகி பாடிக் கொண்டிருந்தார் சீர்காழியின் மகனும், மருத்துவருமான பாடகர் சிவசிதம்பரம். ரெக்கார்டிங் சமயத்தில் கூட, ‘இவர்தான் உங்க தொண்டை ஜவ்வுக்கு தீனி போட்ட நடிகர் ’ என்று வின் ஸ்டார் விஜியை காட்ட முயற்சி நடந்திருக்காது என்று நம்புகிறோம். ஏனென்றால் இவர்தான் அந்த ராஜ்ஜ்ஜாவா? என்று கேட்ட மாத்திரத்தில், ஐயா சிவசிதம்பரனார் அந்த பாடலுக்கான சங்கதியை மட்டுமல்ல, இனி ஜென்மத்திற்கும் பாட்டு என்ற சங்கதியையும் மறந்திருப்பார்.
அப்படியொரு 307 முயற்சி அது. சுற்றி குழந்தைகள் நிற்க, நமது ஊரில் பெண்கள் எல்லாம் சில்லிக் கோடு ஆடுவார்களே… அப்படி நடந்து வந்து கொண்டிருந்தார் வின் ஸ்டார் விஜி. (ஸ்டெப்ஸ்ங்க) அண்ணா சமாதி, பெரியார் சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, இண்டியா கேட், எலிபென்ட் கேட், ரயில்வே கேட், மற்றும் அட்வகேட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் அப்படியே ஸ்டைலாக நடந்து வந்து குளோஸ் அப்பில் அவர் சிரித்து வைக்க, அந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்த குழந்தை ஒன்று, முதல் நாள் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட்டது போல வீறிட்டு அழுதது!
இதெல்லாம் கூட சிறப்பு இல்லை. படத்தில் இவருக்கு இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவர் கொப்பும் குலையுமாக இருந்தார். பெயர் டெப்ளினா என்றார்கள். ‘ரொம்ப ரொம்ப தப்புலினாவாகிட்டோமே’ என்று கூசி குறுகி நடித்துக் கொண்டிருந்தார் அவர். உலகத்திலேயே காதல் காட்சியில் பினாயிலை குடித்த மாதிரி ஒரு ஹீரோயின் முகத்தை வைத்துக் கொண்டிருந்தது இந்த ஒரு படத்தில்தான் என்றால் அந்த டெப்ளினாவே ‘ஆமாங்க சார்ஸ்’ என்பார்.
அதற்கெல்லாம் அஞ்சுகிறவரா வின் ஸ்டார்? அப்படியே அந்த ஹீரோயினை வளைத்துப்பிடித்து ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ‘வென ஆக்கிக் கொண்டிருந்தார். காதல் காட்சி முடிந்தது. இனி கெட்டப் சேஞ்ச். முஸ்லீம் போல குல்லா அணிந்து தொழுகை நடத்தி, கிறிஸ்தவர் போல சிலுவை அணிந்து ஏசுவை இம்சித்து, அப்படியே ஏதோ ஒரு ராஜகோபுரத்தை விபூதி சகிதம் வணங்கிக் கொண்டிருந்தார்.
இவரால் புறக்கணிக்கப்பட்ட ஜைன மதம், சீக்கிய மதம் சார்ந்தவர்கள் எல்லாம் வருந்துவார்களே என்கிற அக்கறை கொஞ்சமாவது வேண்டாம்? அந்த கெட்டப்பிலும் சில காட்சிகள் எடுத்து படத்தில் சேர்த்தால், எப்போதும் ராஜாவை உலகம் முழுக்க ரிலீஸ் செய்து விடலாமே?
சரி, விழா எப்படி நடந்தது? கொல குத்துன்னா கொல குத்து. அப்படியொரு குத்து…. இப்போது வின் ஸ்டார் விஜி அவர்களுக்கு ரசிகர் மன்ற தலைவர்கள் பொன்னாடை போர்த்துவார்கள் என்று அறிவிக்கப்பட, சென்னை மாவட்ட தலைவர், மதுரை மாவட்ட தலைவர், வேலுர் மாவட்ட தலைவர், என்று வரிசை கட்டி நின்றார்கள். (எல்லாரையும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் யூனியன்ல பார்த்த மாதிரியே இருக்குதேப்பா)
ஒரு குத்து மதிப்பாக நாலாபுறமும் திரும்பி திரும்பி வணங்கிக் கொண்டிருந்த வின் ஸ்டார் கடைசிவரைக்கும் தன் கூலிங் கிளாசை கழற்றவே இல்லை. கழட்டினால்தானே தெரியும், இவர் கும்பிட்ட திசையில் ஒரு ஆள் கூட இல்லை என்று!
‘நல்ல சினிமா வந்தாலும் ஓட விட மாட்றானுங்க, கொல்ற சினிமா வந்தாலும் ஓட விட மாட்றானுங்க., வர்றேன்டா… வர்றேன். வசமா சிக்குனீங்க’ என்று வின் ஸ்டார் சவால் விடுவதற்குள் யாராவது படத்தை வாங்கி மொத்தமா பாகிஸ்தான்ல ரிலீஸ் பண்ணிடுங்க.
சினிமாவுல மட்டும் குண்டு வீச மாட்டோம். சினிமாவையே வெடி குண்டா வீசுவோம்ல…?
dai anthana, un moonjiyam nee kannadile parthathe illeya
ajithoda thoppa udambukku ivan evalvo mela.
nee parpaanaa irukalam adukaaga karuppu tholu ulla engal dravidanai ippadiya vimarsippadu?
ennaa kodumai saravana…..