தயாரிப்பாளரின் ஏடாகூட பேச்சு! அம்மாவுக்கு நோட் போட்டு அனுப்பியிருக்குமா உளவுத்துறை?

​”​பார்வை ஒன்றே போதுமே”முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள நேர்முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கள் குறுந்தகட்டைநடிகை நமீதா வெளியிட நடிகர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகைகள் நமீதா, மீரா நந்தன், நடிகர்கள் பிரஜின், கூல் சுரேஷ் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

விழாவில் நடிகர் பாண்டியராஜன் பேசும்போது, என்னோட முதல்படம் ஆண்பாவம். விநியோகஸ்தர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டுனோம். ஒருத்தர் நேரா வந்தார். எல்லாம் நல்லாத்தான்யா இருக்கு. ஆனா நீ ஏன்யா நடிச்சன்னார்?? எனக்கு பகீர்னு ஆயிருச்சு. வேற வழியில்லாம தயாரிப்பாளர் தன்னோடசொத்து கித்தெல்லாம் வித்து படத்தை ரீலீஸ் பண்ணினார். பல்லாவரத்துல படம் ஓடுற தியேட்டருக்குப் போயிருந்தேன். படமே ரொம்ப டல்லா தெரிஞ்சது. மொத்தமே 20பேர் தான் படம் பார்த்துட்டு இருந்தாங்க. வீட்டுக்கு வந்து எங்கம்மா மடியில படுத்துட்டு என் படத்தை நான் நடிச்சுக் கெடுத்திட்டேன்மான்னு அழுதேன். தயாரிப்பாளர் மனசுக்குள்ள அழுதார். அன்னைக்கு நைட் ஷோ, அபிராமி தியேட்டர்ல இருந்து என் அஸிஸ்டெண்ட் போன் பண்ணான். அண்ணே, படம் நல்ல “டாக்”அப்டின்னாம். அந்த“டாக்”கைத் தான் நான் காலையில பல்லாவரத்துலயே பாத்துட்டனேன்னு சொன்னேன். அவன் மேனேஜர் கிட்ட போனைக் கொடுத்து பேசச்சொன்னான். கூட்டம் எப்படி இருக்குன்னு கேட்டேன். ஹவுஸ் ஃபுல்னு சொன்னார்.

நம்ம படத்துக்கு வந்த கூட்டம் இல்ல, படிக்காதவன் படத்துக்கு வந்த கூட்டம், டிக்கெட் கிடைக்காம நம்ம படம் பாக்கிறாங்கன்னு சொன்னார். உடனே கிளம்பி அபிராமி தியேட்டர் போனேன். படம் பாத்த கூட்டத்துல ஒருத்தர், “ஏய், நீதான நடிச்சிருக்க”ன்னு கேட்டார். ஆமான்னு தலையாட்டினேன். ஒரு கையெழுத்து போட்டுக் குடுன்னார். போட்டுக் குடுத்தேன். இதை ஏன் சொல்றேன்னா, நேர் முகம் படத்துல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. இந்த வாய்ப்பு முக்கியமில்லை. இதுக்கு அப்புறம் பார்க்கப் போற விசயங்கள் தான் முக்கியம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்வாங்க.நேரடியாவே நீ காலி அப்டின்னு பேசுவாங்க. எதையும் மனசுல ஏத்திக்காம உங்க வேலையை மட்டும் கரெக்டா செய்ங்க. கண்டிப்பா ஜெயிக்கலாம் என்றார்.

“திருப்பதி லட்டு” படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பேசும்போது விழாவே காரசாரமானது.

“சேதுபதி” படம் ரீலிசான அன்னைக்கே படம் டோரண்ட்ல வெளியாகிருச்சு. பல கோடிகள் போட்டு நாங்கள் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தா அன்னைக்கே இப்படி​ ​ஆன்லைன்ல வரதைப் பத்தி தயாரிப்பாளர்கள் அடங்கிய வாட்ஸ் அப்பில் செய்தியாகப் போட்டு வருத்தப்பட்டிருந்தேன். ஆனா ​யாரும் அதைப் பெரிசா எடுத்துக்கவே இல்லை. ​ஏன்னா யாரோ ஒருவர் வீட்டிலதானே தீ எரியுது நமக்கென்ன என்றிருந்துவிடுகிறார்கள்.. ​யார்​ ​பண்றாங்கன்னு​ ​கண்டுபிடிக்கிறது ஒண்ணும்​​அவ்ளோ பெரிய விசயமில்லை. ஆனா​ கண்டுபிடிக்கிறதை ​யாரும் ​பெரிசா​ ​எடுத்துக்கல. அதான்​ வருந்தவேண்டிய விசயமா இருக்கு.

மானியம் கிடைக்காம 400 ​தயாரிப்பாளர்கள்​ ​கஷ்டப்படுறாங்க. மானியம்​ கொடுத்து 8 வருஷமாச்சு.​ ​ரெண்டு ஆட்சி மாறியாச்சு.​ ​தயாரிப்பாளர் சங்கத்துல​ ​மூணு தடவை நிர்வாகிகள்​ ​மாறியாச்சு. ஆனா, இந்த​ ​மானியம் விஷயத்துல​ ​இதுவரை ஒண்ணும் பெரிசா​ ​நடக்கலை. இவங்க​ ​நேரடியாக தமிழக முதல்வர்கிட்ட கேட்​கல.​ ​

இந்திய சினிமா 100வதுஆண்டு விழா ​கொண்டாடுனப்போ, 10கோடி கொடுத்தாங்க தமிழகமுதல்வர். ஏன்னா அவங்க​​ஒரு நிரந்தர சினிமா​​கலைஞர். நிரந்தர சினிமா​ ​உறுப்பினர். சினிமா மேல​ ​அவங்களுக்கு அன்பு​ ​இருக்கு. அப்படி​ப் பட்டவங்க​ ​இதை நிறுத்தி​ ​வைக்கமாட்டாங்க. அவங்க​ ​பார்வைக்கு விசயத்தை​ ​தயாரிப்பாளர் சங்க​ ​நிர்வாகிகள் கொண்டுபோனாங்களா… அதுக்கு​ ​முயற்சி எடுத்தாங்களான்னு தெரியல.‘ அதே மாதிரி 3 வருசமா,தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கும் விழா நடக்கல.​ ​அதையும் யாரும் கேட்டமாதிரி தெரியல. தேர்தல் நேரத்துல நாடகம் போடக்கூடாதுன்னு​ ​சொன்னா​ ​நாடகக்கலைஞர்கள்​ ​பாதிக்கப்படுவாங்கன்னு​ ​நடிகர் சங்க நிர்வாகிகள்​ ​தேர்தல் கமிஷனரை நேரா​ ​பார்த்து பேசுறாங்க. மனு​ ​கொடுக்கிறாங்க ஆனா, தயாரிப்பாளர் சங்கநிர்வாகிகள், சங்க ​உறுப்பினர்களுக்காக அப்படி​ ​செயல்பட்ட மாதிரி தெரியல.​ ஒரு படத்துக்கு மானியம்கேட்டு அப்ளிகேசன்​ கொடுக்கிறப்போ அதற்குகட்டணமாக ஒவ்வொரு படத்துக்கும் அந்த படம்சார்பாக ரூ.1000/-தயாரிப்பாளர் சங்கம்​ ​மூலமாக அரசுக்கு கடந்த எட்டு வருசமா​ ​போயிட்டிருக்கு. அதனால​ ​மானியம் கேட்டு​ ​விண்ணப்பிக்கிறது​ ​அந்தத்துறை சம்பந்தமான​ அரசு அதிகாரிகளுக்கு நல்லாவே தெரியும்.

எல்லாப்​ ​படத்தையும்​ ​பார்த்தாச்சுன்னும்​ ​சொல்றாங்க. ஆனா, ஏன்​ ​எட்டு வருசமா நிறுத்தி​ ​வச்சிருக்காங்க​ ​அப்டிங்கிறதுக்கு எந்தவிபரமும் தெரியல.​ எனக்குத் தெரிந்து நாம் அரசை சரியான முறையில் அணுகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இனியாவது ​ நடிகர் சங்கம் முதல்வரை அணுகுவதைப் போல் தயாரிப்பாளர் சங்கமும் அணுக வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள் ​ என்றார் சுரேஷ் காமாட்சி.

அம்மாவுக்கு நோட் போட்டு அனுப்பியிருக்குமா உளவுத்துறை?

பின்குறிப்பு- ஆமா இந்த செய்தியில எதுக்கு நமீதா படம்? அது விழாவுக்கு வந்திருந்த போது எடுத்ததுதான். சும்மா கிளுகிளுப்பா இருக்கட்டுமேன்னு…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Ner Mugam Movie Audio Launch Stills

Close