தீர்ந்தது பிணக்கு திரும்பவும் ஷுட்டிங் மீண்டும் சிம்பு நயன் துள்ளல்
சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே, ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ரியும் வாயை பிளந்து ஆஹாவென்றது. ஆனால் இந்த ஆஹாவை அடுத்தடுத்து வந்த செய்திகள் ஓஹோவாக்கி, அப்புறம் ஓ…வ்வ்வ்வ்வ் என்றாக்கிவிட்டது. படம் டிராப் என்பதுதான் கடைசியாக மீடியாவில் கசிந்த பரபரப்பு. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ், இயக்குனர் பாண்டிராஜுக்கு ஒன்றரை கோடி பாக்கி, நயன்தாராவுக்கு ஐம்பது லட்சம் பாக்கி என்று வைத்ததால், தள்ளாடிக் கொண்டிருந்தது படப்பிடிப்பு. அப்புறம் ஒரு கட்டத்தில் இது வேலைக்காவது என்று முடிவெடுத்த பாண்டிராஜ், அமௌன்ட் செட்டில் பண்ணினா ஷுட்டிங் வர்றேன், இல்லேன்னா இல்லே என்று கூறிவிட்டு கிளம்ப, சிம்புவும் வாலு படத்திற்கு தேதிகள் கொடுத்துவிட்டு அங்கே கிளம்பினார்.
ரோமியோவும் ஜுலியட்டும், இப்படி ரோ தனியா ஜு தனியா பிரிஞ்சா நல்லாயிருக்குமா? என்று நினைத்த நல்லெண்ணர்கள் சிலர், இதயம் வழிய பஞ்சாயத்து நடத்தினார்களாம். பேச்சு வார்த்தை திருப்திகரமாக முடிந்து செல்ல வேண்டிய பாக்கிகள் சென்று சேரும் விதத்தில் வியூகம் அமைக்கப்பட்டதாம். அப்புறமென்ன?
இன்னும் சில தினங்களில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்படவிருக்கிறது. ஆந்திராவில் ஓராண்டுக்கு ரெட் போட்டுவிட்டதால், தமிழ் படமே கதி என்று இருக்கும் நயன்தாராவும் மனமுவந்து ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு கால்ஷீட் கொடுக்க இசைந்திருக்கிறாராம்.
கடைசி நேரத்துல யாரும் கட்டைய போடாம இருக்கணும்!