விஜயகாந்த் எல்லாரையும் அடிக்கறது ஏன்? -ராதிகா குபீர் சிரிப்பு

“இதென்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை?”என்பது போலவேதான் இருக்கிறது விஜயகாந்தின் பேச்சும், அவரது செயல்களும்! ஆனால் எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் அவர் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை உம் போட மாட்டாரா என்று காத்திருப்பது அதைவிட பெரிய சோதனை! நாற்காலிய புடிக்கணும்னா முக்காலியை முழுங்கிட்டு தண்ணி குடிக்கவும் தயார் என்பது போல பிற கட்சிகள் நடந்து கொள்ள, விஜயகாந்த் மட்டும் “பின்னாடியே அலைய வைக்கும்” கொள்கையிலிருந்து கிஞ்சிற்றும் மாறுவார் போல தெரியவில்லை. நடுநடுவே தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அவர் விடும், உதை இன்னபிற சமாச்சாரங்கள் நாட்டையே கிச்சு கிச்சு மூட்டி வருகிறது.

இந்த நிலையில்தான் இன்று நையப்புடை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்த சின்னத்திரை சி.எம். ராதிகா, விஜயகாந்த் பற்றி பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. எஸ்.ஏ.சி சார் படத்தில் நடிக்கிற எல்லாருக்கும் அடி விழும். அவ்வளவு பஞ்சுவாலிடி பார்ப்பார் அவர். அடிவாங்காம தப்பியது நான் மட்டும்தான். ஆனால் விஜயகாந்த்தான் தினம் தினம் அடிவாங்குவார். அவர் இப்போ எல்லாரையும் அடிக்கறதை பார்த்துட்டு, இந்த பழக்கம் அவருக்கு எங்கேயிருந்து வந்திச்சுன்னு யோசிச்சு பார்த்தேன். அது எஸ்.ஏ.சி சார்ட்ட இருந்துதான் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சிரிக்க, மேடைக்கு எதிரே இருந்த அத்தனை பேரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

“இன்னைக்கு ஜகஜ்ஜோதியா மாநாட்டை நடத்திகிட்டு இருக்காரு. அவரையும் சேர்த்து தமிழ்நாட்டுக்கு ஆறு பேர் சி.எம் பதவிக்கு போட்டி போட்றாங்க. இந்த தமிழ்நாட்டு மக்கள் இருக்காங்களே… அவங்களுக்கு எவ்வளவு சூடு பட்டாலும் தெரியாது. திருந்த மாட்டாங்க” என்றார் சிரித்துக் கொண்டே.

உதடுகள் சிரிக்கிறது. உள்ளம் மட்டும் அழுகிறது. அது எங்களுக்கும் புரிகிறது சின்னத்திரை சி.எம் அவர்களே…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சி.எம்னு சொல்றதுக்கு ஏன் பயப்படுறீங்க? எஸ்.ஏ.சி பேச்சால் பரபரப்பு

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஹீரோவாக நடிக்கும் படம் நையப்புடை! ரிட்டையர்டு மிலிட்டரி ஆபிசராக இவரும், தொலைக்காட்சி நிருபராக பா.விஜய்யும் நடித்திருக்கிறார்கள். விஜய் விக்ரம் என்ற 19 வயது...

Close