“ திருப்பித் தா… ” நெருக்கப்படும் சிவகார்த்திகேயன்?
பலமுறை தள்ளிப்போன ரஜினி முருகன் இந்த முறை தட்டாமல் தவறாமல் திரைக்கு வந்துவிடும் போலதான் தெரிகிறது. அதற்கான முஸ்தீபுகளை ஆரம்பித்து பரபரவென தீர்க்கப்பட்டு வருகின்றன பஞ்சாயத்துகள். இந்த படத்தின் ட்ரெய்லர்களும், வெளியிடப்பட்டிருக்கும் பாடல் டீசர்களும் இன்னொரு ஷ்யூர் ஹிட் என்பதற்கான அத்தனை பார்முலாக்களையும் வகுத்துக் கொடுக்க, ஆல் ஏரியா சோல்ட் அவுட்.
இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத நெருக்கடி சிவகார்த்திகேயனுக்கு! இன்றைய தேதியில் அவர் இருபத்தைந்து சி கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறது ஃபீல்டு. ஆனால் அப்போது இந்த படத்தில் கமிட் ஆகும்போது அவர் வாங்கிய சம்பளம் ஒரு கோடி. ஆறு கோடி கேட்டு, அதை ஒரு கோடியாக குறைத்த கதையெல்லாம் பிளாஷ்பேக் தெறி சமாச்சாரம்.
இப்போது இந்த பஞ்சாயத்தில் “யார் யாரு எவ்ளோ ஹெல்ப் பண்றீங்களோ, பண்ணுங்கோ…” என்று ஆரம்பித்தார்களாம் நடுவர்கள். படத்தின் ஹீரோவான இவருக்கும் நெருக்கடி. “தம்பி. உங்க சார்பா ஏழு கோடி கொடுத்துருங்க” என்று கேட்க, ஆடிப்போனாராம் இவர். வாங்குனதே ஒரு கோடி. இதில் ஏழு கோடி கொடு என்றால் யாருக்குதான் ஷாக் வராது? “வேணும்னா வாங்குன சம்பளத்தை அப்படியே கொடுத்துடுறேன். ஆளை விடுங்க” என்று இவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஏரி குளத்தையெல்லாம் எழுதி கேட்டால்தான், ஒரு டம்ளர் தண்ணியாவது கிடைக்கும்னு நினைச்சு கேட்டாங்களோ, இல்ல… நிஜமாகவே ஏழு கோடி கேட்டாங்களோ? பட்…? சிவா சைட்ல செம ஷாக்!
ஒரு படத்தில் நடிக்கறதுக்கு முன்னாடி, அலர்ட் ஆறுமுகத்தை கன்சல்ட் பண்ணாம இறங்கவே கூடாது போலிருக்கே?