ஒரே வழி தற்கொலைதான்! சிவா பட சர்ச்சையில் பிரபல தயாரிப்பாளர் மிரட்டல்?

முள்ளும் உடையாமல் சேலையும் கிழியாமல் ஒரு பிரச்சனையை சரி செய்துவிட வேண்டும் என்று கடும் போராட்டம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்! முள் யார்? சேலை யார்? என்பது இப்போது முக்கியமல்ல. தீர்வு ஒன்றுதான் முக்கியம்.

‘சிவகார்த்திகேயன் கால்ஷீட் தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் தராமல் இழுத்தடிக்கிறார்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தில் மூன்று தயாரிப்பாளர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா. இரு தரப்பையும் அழைத்து தொடர்ந்து அலசி வருகிறது சங்கம். இருவர் தரப்பிலுமே நியாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘எப்பவோ பேசிய சம்பளத்திற்கு இப்போது நடிக்க முடியாது’ என்று சிவா தரப்பிலும், ‘அவரது இப்போதைய மார்க்கெட் நிலவரப்படி சம்பளத்தை தர முடியாது’ என்று ஞானவேல் தரப்பிலும் கூறப்படுகிறதாம். இருவரும் இதற்குண்டான நியாயத்தை தத்தமது வாதங்களாகவும் வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர்கள் இயங்கி வரும் வாட்ஸ் ஆப் குரூப்பில் ஒரு விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். அது இன்டஸ்ட்ரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பது என்ன?

“நியாயம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத்தை நம்பியுள்ளேன். நியாயம் கிடைக்கும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து நான்கு வருடங்கள் காத்திருந்தேன். கிடைக்காது என்கிற போது தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை!” – இதுதான் அந்த வாட்ஸ் அப் பதிவு.

இதையடுத்து அவசரமாக கூடிய தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பிரச்சனை குறித்து கடுமையாக விவாதித்து வருகிறார்கள்.

To listen Audio Click Below:-

https://youtu.be/DzmTvO9Gboo

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Sad News For GV Prakash Fans.

https://youtu.be/A___zdH31rc

Close