சீரியலில் நடிக்கப் போகாதே தேவயானியை கட்டுப்படுத்துகிறாரா ராஜகுமாரன்?

‘சினிமாவில் கருத்தொருமித்த தம்பதிகளை வரிசைப்படுத்தவும்’ என்றால் யாரும் யோசிக்காமலே டிக் அடிக்கக் கூடிய பெயர் தேவானி- ராஜகுமாரன் தம்பதியின் பெயராகதான் இருக்கும். எல்லா வகையிலும் ராஜகுமாரனை ராஜாதி ராஜா குமாரனாக்கிய பெருமை தேவானியையே சாரும். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த காதல் அவர்களுடையது. நிஜமான அன்பிருந்தால், ரோமாபுரி ராணியை கூட, சாதா பூரி மாஸ்டர் மடக்கிவிட முடியும் என்பதற்கு இவர்கள் காதலே சாட்சி. அப்படியெல்லாம் உலகத்தை அதிசயிக்க வைத்த இவர்களின் காதலில் இப்போது பொட்டு சைசுக்கு ஒரு லொட்டு என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

என்னவாம்?

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த தேவயானி, திருமணத்திற்கு பிறகு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்பு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தினந்தோறும் ஒரு லட்சம் சம்பளம். மரியாதையான அப்ரோச் என்று தேவயானியை இங்கேயும் தங்க தாம்பாளத்தில்தான் தாங்கியது சின்னத்திரை. திடீரென சின்னத்திரையிலிருந்தும் விலகிய தேவயானி இப்போது யார் போனாலும், ‘நடிக்கறதில்லீங்க’ என்கிறாராம். ஏன்? எல்லாம் ராஜகுமாரனின் பிரஷர்தான் என்கிறார்கள்.

இனிமேல் நடிக்கப் போகக் கூடாது. வீட்டிலேயே இரு என்கிறாராம். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எப்போதெல்லாம் தேவயானி கோபப்படுகிறாரோ, அப்போதெல்லாம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு கிளம்பிவிடுகிறாராம் ராஜகுமாரன். பல நாட்கள் அவரில்லாமல் போகும்போது ஆட்டோமேடிக்காக கோபம் தணிந்து சமாதானம் ஆகிவிடுகிறாராம் தேவயானி. கோவிலுக்கு போயிருந்தேன். இந்த திருநீறு என்று தேவயானி நெற்றியில் ராஜகுமாரன் விபூதி பூசியவுடனே அவரது கோபம் தணிந்துவிடுகிறதாம்.

இப்படி விபூதி மந்திரம் போட்டே அவரை சின்னத்திரையிலும் நடிக்க விடாமல் வீட்டிலேயே பூட்டி வைத்திருக்கிறார் என்று ராஜகுமாரன் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கிறது சின்னத்திரை வட்டாரம். நாளொன்றுக்கு மூன்று லட்சம் வரைக்கும் பேமென்ட் கொடுக்க தயாராக இருக்கும் இந்த தொழிலை ஏன் புறக்கணிக்கிறார் ராஜகுமாரன் என்பதுதான் புரியாத புதிர்.

2 Comments
  1. ஜெஸ்ஸி says

    அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு நமக்கு சரியா தெரியாத நிலையில் இப்படி நியூஸ் போடறது தப்பு. கருத்து சொல்றதும் தப்பு. இருந்தாலும் என்னோட மனசுல தோணின சில விஷயங்கள் இங்க சொல்ல ஆசைப்படறேன்.

    ராஜகுமாரன் தேவயாணி திருமணம் நடந்தப்போ தேவயாணி தமிழ் சினிமாவின் ஒரே ஒரு குடும்ப பாங்கான நடிகை என்ற நிலையில் இருந்தவர். ரொம்ப பிசியான நடிகை. நான் அறிந்த வரை இரண்டாம் இடத்தில் இருந்தவர். அந்த நிலையில் தான் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.

    தேவயானியின் குடும்பத்தினரும் இருக்கும் பணம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இவர்களை ஒதுக்கி விட்டனர். சம்பாதித்தே ஆகவேண்டிய நிலையில் இருவரும் இருந்தனர். சினிமா வாய்ப்புகள் பறிபோனதால் தேவயானி சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். வெளியே ஒன்றும் சொல்லாவிட்டாலும் ராஜகுமாரன் தன்னை சம்பாதித்து காப்பாற்றுவார் என மனதளவில் எண்ணியிருப்பார் தேவயானி. ஆனால் ராஜகுமாரன் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுத்தாற்போல் எதுவும் தெரியவில்லை. சொந்தப்படம் எடுக்கறேன் பேர்வழி என தேவயாணி சம்பாத்தித்த பணத்தை அழித்தது தான் மிச்சம். முதல் படமாவது பரவாயில்லை. இரண்டாம் படத்தின் போது இவர் செய்த அழிச்சாட்டியம் ஒத்துக்கொள்ளவே முடியாதது.

    அதுவும் கதாநாயகனாக நடிக்க அவர் சொன்ன காரணம் ????? இவர் நடித்த அந்த கதாப்பாத்திரத்தின் கனத்தை தாங்க கூடிய நடிகர்கள் தமிழ் சினிமாவிலேயே இல்லை என்றார். நடிப்பு வராத, நடனம் வராத இவரால் தாங்க முடிந்த அந்த பாத்திரம் தமிழ் சினிமாவின் எந்த தொழில் முறை நடிகர்களாலும் தாங்க இயலைவில்லை. என்னே கொடுமை…???

    இவ்வளவு செலவு செய்து திரைப்படம் எடுத்து, விளம்பரம் செய்து, ஓடாத படத்திற்கு வெற்றி விழா எடுத்து என பணத்தை வீணாக்கியதற்கு, ஒரு நல்ல திறமையுள்ள, கதை வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு இயக்குனர் வாய்ப்பளித்து, நல்ல கதாநாயகனை வைத்து ஒரு நல்ல படத்தினை தயாரித்து, தயாரிப்பாளராக வெற்றி பெற்றிருக்கலாம்.

    இந்நிலையில் இங்கே இன்னொருவரை பற்றி சொல்ல விரும்புகிறேன், சுந்தர். சி – ஐவரும் குஷ்பு அவர்களை திருமணம் செய்யும் போது குஷ்பு ஊர் அறிந்த பிரபலமான நடிகை. ஆனால் பின்னர் தன திறமையினால் முன்னேறி தன்னையும் உலகம் அறிந்த இயக்குனராக முன்னிருத்திக் கொண்டார். குஷ்புவின் கணவர் என்ற அடையாளத்தை மாற்றி இயக்குனர் சுந்தர். சி என அனைவரையும் அறிய வைத்தார்.

    ராஜகுமாரன் இன்னும் தேவயானியின் கணவராகவே இருக்கிறார். என்ன செய்ய …????

    1. Tiger says

      wow amazing comment

Reply To Tiger
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல, கடவுள் / கவிதைத் தொகுப்பு / ஆசிரியர்:  சந்திரா தங்கராஜ் வெளியீடு: பட்டாம்பூச்சி பதிப்பகம்

நினைவின் அறைகளிலும் அனுபவங்களின் வீதிகளிலும் இருளின் கருப்பு வண்ணத்திற்குள்ளும் சிதறிக் கிடக்கிற வார்த்தைகளை பொறுக்கி எடுத்து, கோர்த்து, மடியில் பரப்பி விளையாடுகிற சந்திராவின் விரல்களுக்குள் தீராத பேரன்பும்,...

Close