ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா எங்கே? விஷால் அணியில் விரிசலா?
கூட்டத்தில் கண்கள் தேடுகின்ற மூவரும் இப்போது அங்கு இல்லை. தேடுகிற கண்களுக்கு விஷால் சொல்லப் போகும் பதில் என்ன? இதுதான் பத்திரிகை, தொலைக்காட்சி, இன்டர்நெட் வாசகர்களின் பெரும் கேள்வியாக இருக்கிறது சமீப காலமாக. நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில், சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிக் கொண்டிருக்கிறார் விஷால். எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஒவ்வொரு ஓட்டாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் இந்த விஷயத்தை கூர்ந்து கவனித்து வரும் பத்திரிகையாளர்கள். இந்த நேரத்தில் ஒரு திடீர் கேள்வியாக முளைத்திருக்கிறது இது.
விஷாலின் நிழல் போலவே திரிந்த ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா ஆகிய முப்பெரும் தளபதிகள் ஏன் விஷால் பக்கமே வராமல் ஒதுங்கியிருக்கிறார்கள்? வெளியூருக்கு ஓட்டு சேகரிக்க போயிருக்கும் விஷாலுடன், நண்டு சுண்டு நத்தையெல்லாம் போயிருக்கும் போது, தலையாக இருந்து வாயாக முழங்கியிருக்க வேண்டிய இவர்களை ஏன் அந்த கூட்டத்தில் காணவில்லை? இத்தனைக்கும் ஆர்யாவும், ஜெயம் ரவியும் ஷுட்டிங் இல்லாமல்தான் வீட்டில் இருக்கிறார்கள். இவர்களை தடுத்தது எது? ஒருவேளை விஷால் அணியில் விரிசலா? இப்படியெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
ஜீவாவை அவரது அப்பா ஆர்.பி.சவுத்ரியே தடுத்துவிட்டதாக ஒரு தகவல் வருகிறது. அதற்கப்புறம் ஆர்யாவை தடுக்கவோ, அட்வைஸ் பண்ணவோ ஆளே இல்லை. அப்படி அட்வைஸ் பண்ணினாலும், அவர் கேட்க மாட்டார். ஏனென்றால் அவரை பொருத்தவரை இந்த வானத்திற்கு கீழேயிருக்கும் அத்தனை தொல்லை தொந்தரவுகளுக்கும் டேக் ஈஸி மாத்திரையை போட்டுக்கொண்டு சமாளித்துவிடலாம் என்கிற எண்ணம் கொண்டவர். அவரே ஒதுங்கியிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.
அதற்கப்புறம் ஜெயம் ரவி. இவரையும் இவரது அப்பாவையும் ராதிகாவே நேரே சென்று சந்தித்து பேசினாராம். தேர்தல் நெருங்குவதற்குள் விஷாலை சுற்றியிருக்கும் அத்தனை பேரையும் தங்கள் பக்கம் இழுப்பது கூட பிரச்சனையில்லை. அவர்களை விஷால் பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டாலே போதும் என்று நினைக்கிறாராம் ராதிகா. அதற்கான முயற்சியின் முதல் ஸ்டெப்புதான், விஷாலின் நிழல்களாக இருக்கும் இவர்களை பிரித்தது.
நாட்கள் நகர நகர இனி என்னவெல்லாம் நடக்குமோ?
பின்குறிப்பு- இவ்வளவு களேபரத்திலும் விஷால் தெளிவாக இருக்கிறார். எப்படி? உதயநிதி ஸ்டாலின் தானே முன் வந்து, “நண்பா… நான் வேணா துணைக்கு வரட்டுமா?” என்றாராம். “ஐயா சாமீய்… இதுல அரசியல் சாயமே வேணாம். நீ உள்ள வந்தா அது திமுக- அதிமுக யுத்தமாக கலர் மாறிடும். ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டாராம் விஷால்.
விஷால் அணி தான் கண்டிப்பாக வெற்றி பெரும்.
வெற்றி பெற போவது திரு. விஷால் அவர்கள் தான்.
திரு விஷால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.