உங்க பிரச்சனைதான் என்ன? சிங்காரவேலனிடம் விசாரித்த ரஜினியின் அண்ணன்?
சிங்காரவேலன் கதையை மீண்டும் ரஜினியின் லிங்காவிலிருந்து ஆரம்பிக்க தேவையில்லை. லேட்டஸ்ட் நிலவரம் என்ன? அதுதான் இது. இதை கேள்விப்படுகிற யாரும் இதில் உண்மையிருக்குமா? என்று சந்தேகப்படுவது இயற்கைதான். ஆனால்? கோடம்பாக்கத்தில் சுட சுட நிலவும் தகவல் இதுதான்.
இந்த விவகாரம் துவங்கி, பிச்சை போராட்டம் அறிவிக்கப்படும் வரை ரஜினி தரப்பிலிருந்து யாரும் சிங்காரவேலன் கோஷ்டியை சந்திக்கவோ, தனது சார்பில் பேச்சு வார்த்தை நடத்தவோ முன்வரவில்லை. பிரச்சனை முற்றியதும் பெங்களூர் நம்பரிலிருந்து ஒரு போன் வந்ததாம். எடுத்தால், நான் சந்திரஹாசன் பேசுறேன். ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவோட மருமகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாம். அன்றிலிருந்து இன்று வரை அந்த போன் கால் வந்து கொண்டேயிருப்பதும், சிங்காரவேலன் தொடர்பில் இருப்பதும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஷயம்.
கடந்த இரண்டு நாட்களாக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவே சிங்காரவேலனை தொடர்பு கொண்டு, ‘லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் என்னதான் நடக்குது? நான் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்’ என்று கேட்டதாக தகவல். அதுமட்டுமல்ல, ‘ரஜினி கால்ஷீட் கிடைத்தால் உங்களில் யாராவது ஒருவர் வெளியாட்கள் யாரிடமும் பைனான்ஸ் வாங்காமல் படம் பண்ணுவீர்களா?’ என்றும் விசாரித்தாராம். ‘கடன் வாங்காமல் அவ்வளவு பெரிய தொகையை புரட்டுவது கடினம்’ என்று இவர் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சில தினங்களில் சத்யநாராயணா-சிங்காரவேலன் சந்திப்பு நிகழ்ந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். யார் தலையையும் உருட்டாமல் சொந்த பிரச்சனையை தீர்த்துக் கொண்டு திரும்பினால் நல்லது!
எனது இறைவன் எனது கடவுள் எனது தெய்வம்
எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் பாட்டாளிகளின் தோழன் உழைப்பாளிகளின் தொண்டன் ரஜினி அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு வாழ வேண்டுகிறேன்.
தலைவர் ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அற்ப பயல்களுக்கு சுளுக்கு எடுப்போம். எங்கள் இதய தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வம்புக்கு இழுத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தெய்வத்தின் கட்டளைக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.
லூசாடா நீ.
தலைவா !!! தலைவா !!! எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சிங்காரவேலன் குழுவினருக்கு விநியோக உரிமை கொடுத்தால் அவ்வளவு தான் – கொதிக்கும் திரையுலகம்
லிங்கா, கங்காரு, புறம்போக்கு என்ற பொதுவுடமை என்று விநியோக உரிமை பெறும் எல்லாத் திரைப்படங்களிலும் நஷ்டக் கணக்கு காண்பித்து பிரச்னை கிளப்பி வருகிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர்.
“எல்லா வியாபாரங்களிலும் லாப நஷ்டம் சகஜம். திரைத்துறையைப் பொறுத்தவரையில் லாபம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு நஷ்டமும் இருக்கும். காலம் காலமாக இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டம் வரும் போதெல்லாம் சுமுகமாகப் பேசித் தீர்த்து வரும்நிலையில், சிங்காரவேலன் குழுவினர் போட்ட காசுக்கு ஒரே வாரத்தில் பல மடங்கு லாபத்தை எதிர்பார்த்து, அது வந்தாலும், வராவிட்டாலும் நஷ்டக் கணக்கைக் காண்பித்து பிரச்னை செய்து வருகிறார்கள். லேட்டஸ்டாக ‘புறம்போக்கு என்ற பொதுவுடமை’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் என்று நடத்தப்பட்டது. சமீப காலமாக திரைப்படங்கள் தயாரித்து வெளிவருவதே சிரமமான சூழலில் இந்த மாதிரியான ‘சக்சஸ் மீட்’டுகள் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை பார்க்க மக்களை மேலும் கவர்ந்திழுக்கும். புறம்போக்கு என்ற பொதுவுடமை ஊடகங்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படத்தின் சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்களான சிங்காரவேலன் குழுவினர் ‘எங்களுக்கு நஷ்டம். இதில் UTV தயாரிப்பு நிறுவனம் சக்சஸ் மீட் நடத்தியது சரியல்ல” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, இவர்களின் தொடர் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு திட்டத்துடன் திரைத்துறையில் நுழைந்து பிரச்னைகளைக் கிளப்பி திரைத்துறையைக் கைப்பற்றி யாருக்கோ ஜால்ரா அடிக்கும் நடவடிக்கைகள் இது. இனிமேலும் இந்தக் குழுவினருக்கு யாரும் விநியோக உரிமை கொடுத்தால் என்னவாகும் என்பதை வரிசையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது” என்கிறார்கள் திரைத்துறையினர்.