சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விடுவதா? விஷாலின் புதிய முடிவால் மகிழ்ச்சி!

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விட்ட கதையாகிருச்சு பொழப்பு. அதற்கப்புறமாவது விழித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி? விழித்துக் கொண்டுவிட்டார் விஷால். அவர் நடித்து சமீபத்தில் நடித்து வெளிவந்த மருது படத்தின் ரிசல்ட்? நினைத்த மாதிரியில்லை என்பது மட்டும் நிச்சயம். ககெக்ஷன் விஷயத்தில் கொம்பனுக்கு கீழேதானாம். இதனால் சற்றே அப்செட் ஆன விஷால், ஏன் சண்டைக்கோழி பார்ட் 2 விஷயத்தில் முரண்டு பிடிக்கணும் என்று நினைத்திருக்கலாம். தன்னால் கைவிடப்பட்டது என்று ஓப்பனாக அறிவிக்கப்பட்ட அந்த படத்திற்கு உயிர் கொடுக்க முடிவு செய்துவிட்டார்.

இதனால் படத்திற்கு மட்டுமா உயிர்? அதை இயக்கப் போகும் லிங்குசாமிக்கும்தான். பாலிவுட்டில் ஒரு படம் இயக்கப் போவதாக கிளம்பினார் அல்லவா? அந்த படம் அங்கே டிராப். அண்டை மாநிலத்தில் கால்ஷீட் கொடுத்திருந்த அல்லுஅர்ஜுன் கடைசிநேரத்தில் காலை வாரி விட்டிருக்கிறார். ஓய்ந்து உடைந்த நேரத்தில்தான் உள்ளே வந்தாராம் விஷால். வெற்றிலைக்கு சுண்ணாம்பு ஆறுதல், வேதனைக்கு படம்தான் ஆறுதல் என்று ஒண்ணுக்குள் ஒன்றாகிவிட்டார்கள் இருவரும்.

சினிமாவிலும் அரசியலிலும் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. அதை கண்கூடாக நிரூபித்த விஷாலுக்கு அகில உலக அஞ்சான் பட ரசிகர்கள் சார்பில் ஒரு கொழுத்த நன்றி!

1 Comment
  1. roja says

    மகேஷ்பாபு இல்லை அது allu arjun

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Super Star Fans Song – En Thalaivan Nee Thaan Lyric Video

https://youtu.be/I3mizdCEnrs

Close